கற்றுகொடுங்கள் இந்தியாவுக்கு!

பள்ளியில் படித்த காலத்தில் டீயுசன் படித்த நேரத்தில் கண்டிப்பாய் எல்லார் மனதிலும் பல வாத்தியார்கள் வில்லன்களாகவும்,இன்னும் பலர் ஹீரோக்களாகவும், வெகு சிலர் தாமும் ஜீரோ ஆகி, நம்மையும் ஜீரோவாக்கி பாடம் கற்பித்திருப்பதை நீங்கள் கண்டதுண்டு, கேட்டதுண்டு, அப்படியான அனுபவங்களில் சிக்கியதும் உண்டு!சரியா?!

சரி அந்த மாதிரியான சமயங்களில் நமக்கும் கூட சில பல எண்ணங்கள் தோன்றியிருக்குமல்லவா?

இதே வாத்தியாரு இப்படி கிளாஸ் எடுத்திருந்தா நாமளுக்கு நல்லா புரியும்?

இதே வாத்தியாரு இப்படி அப்ரோச் பண்ணியிருந்தா இன்னும் எவ்ளோ ஆசையாக இருந்திருக்கும்?

இந்த வாத்தியாரு எப்படி அழகா பாடம் புரியிற மாதிரி எடுக்கறாரு?

இந்த வாத்தியாரு எப்படி அன்பா திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்கறாரு?

இப்படியான பல பல எண்ணங்கள் ( எனக்கு 2 எண்ணங்கள்தானப்பா திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வருது!) நம்ம மனசுக்குள்ளயும் ஏற்பட்டிருக்கும்!

அது மாதிரியான எண்ணங்கள் சிலருக்கு தீவிர விருப்பமாக மாறி, அழகாய் ஆசிரிய பணி செய்பவர்களாக மாறி விடுவார்கள்! ஆனாலும் கூட அந்த மாதிரியான ஆசைகள் அதிகம் இருந்தும் கூட சூழ்நிலை காரணமாய் தடம் மாறி அது போன்ற சந்தர்ப்பங்களுக்குள் செல்லாமலே பயணித்துக்கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு!

அது போன்றவர்களுக்காகவே,நேரம் இருக்கும் நிச்சயம் செய்ய முடியும் நம்மால், என்ற எண்ணமும் ஆர்வமும் கூட அதிகம் இருக்கும்! ஆனால் வாய்ப்புகள் என்பதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்க கூடியவையாக இருக்கும்! பகுதி நேர பணி வாய்ப்புக்கள் என்பது ரொம்ப அருகிய வாய்ப்பாகவே இருக்கும்!


இதே எண்ணங்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற, டைம்ஸ் ஆப் இந்தியாவின் “கற்றுக்கொடுங்கள் இந்தியாவுக்கு” என்ற திட்டம் கண்டிப்பாய் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு.....!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நம் பாலர் காலத்தில் இருந்து கல்லூரிக் காலம் வரை நிறைய ஆசிரியர்கள் இருந்தாலும் நினைப்பில் நிற்பவர்கள் ஒரு சிலரே. காரணம் அவர்கள் கொடுத்த முறையான கற்பித்தல். நல்ல சிந்தனைப் பதிவு

said...

நல்ல பதிவு