தமிழக "தலை"களின் ராஜாங்க பயணம்..!

கருணாநிதி, ஜெ, ராம்தாஸ்,& காங்கிரஸ் கோஷடி எல்லாம் சேர்ந்து தமிழக நலன் கருதி, மத்திய அரசிடமிருந்து நெறையா நிதி வேண்டி,டெல்லிக்கு ஒரு பிளைட்ல போறாங்க,

Photo Sharing and Video Hosting at Photobucket

அப்ப நம்ம முதல்வரு பிளைட்ல இருந்துக்கிட்டு, நான் ஊருக்கு போய் வர வரைக்கும், என்னால முடிஞ்சது ஏதோ ஒருத்தன் சந்தோஷமா இருக்கட்டுமுனு சொல்லி, ஒரு நூறு ரூபாய் நோட்ட எடுத்து, ஜன்னல் வழியா தூக்கி போட்டுறாரு!

அதை பார்த்த ஜெ அட..! இது என்ன பிசாத்து காசுன்னு, சொல்லிக்கிட்டு இரண்டு ஐம்பது ரூபா நோட்ட எடுத்து ஜன்னல் வழியா தூக்கிப்போட்டு, இதனால ரெண்டு பேரு சந்தோஷமா இருப்பாங்களேன்னு, பெருமிதமா ஒரு லுக் விட, அத பார்த்த அய்யா என்னாடா.! நாம இங்க இருக்கறதையே மறந்துட்ட மாதிரி, எதிரும் புதிருமான ஆளுங்க போட்டி போட்டுக்கிட்டு தமிழ் மக்களுக்கு நல்லது பண்றாங்களேன்னு, டென்ஷனாகி,கோ.க.மணிக்கிட்டருந்து பத்து, பத்து ரூபா நோட்டா வாங்கி, ஜன்னல் வழியா தூக்கிப்போட்டுட்டு, உங்களால ஒருத்தன் இரண்டு பேருதான் சந்தோசப்படுவாங்க,ஆனா, என்னால ஒரு பத்து பேராவது சந்தோஷப்படுவாங்களேன்னு ஒரு மப்போட சிரிக்க,

பைலட் ரூமுலேருந்து ஒரு சத்தம் வந்தது "இப்ப நான் உங்கள பிளைட்லேர்ந்து தூக்குனேன்னா,டோட்டல் தமிழ்நாடே எவ்ளோ சந்தோஷப்படும் தெரியுமான்னாராம்..!

0 பேர் கமெண்டிட்டாங்க: