ரொம்ப நாளா மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருந்த கேள்வி!
எத்தனையோ நண்பர்களுக்கு,உடன் பணிபுரியும் சகாக்களுக்கு, நாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்பு உண்டு மகிழ்ந்ததுண்டு! ஆனால் நாம் நம் பெற்றோர்களின் திருமண நாள் அவ்வளவாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோமா?
சகோதர சகோதரிகளின் கல்யாண நாளினை கூட நாம் வெகு எளிதாக வாழ்த்து சொல்லி கொண்டாடும் மனநிலை பெற்றிருந்தாலும் கூட,
அம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு மனநிலையுடன் வளர்க்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் எனக்கு தெரிந்த மட்டில் கொஞ்சம் குறைவுதான்!
இத்தனைக்கும் அது ஒன்றும் அவ்ளோ பெரிய தவறான விசயமும் கூட இல்லை! ஆனாலும் கூட ஏதோ மனதளவில் ஒரு கூச்சம்!
சொல்லுங்களேன்! எத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் தாய் தந்தைக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறீர்கள்?
இது வரை எப்படியோ!? இனிய வரும் காலங்களில் பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகளினை சொல்லி மகிழ்ந்திருங்கள்! -
சின்ன சின்ன அன்பில்,வாழ்த்துக்களில்,மகிழ்ச்சிகளில் தானே, இனிய வாழ்க்கை இருக்கிறது!
Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts
பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்களேன்!
# ஆயில்யன் 31 பேர் கமெண்டிட்டாங்க
Labels: என் உள்ளத்தில், விவாதம்
Subscribe to:
Posts (Atom)
