Showing posts with label சஷ்டி. Show all posts
Showing posts with label சஷ்டி. Show all posts

சஷ்டி ஸ்பெஷல் – குடுமியான் மலை

வருடந்தோறும் வரும் கோடை விடுமுறைகளில் புதுக்கோட்டையில்தான் சுமார் இருபது நாட்களுக்குமேல் அத்தை வீட்டில் தஞ்சம்! அங்குதான் சைக்கிள் ஓட்டுவதிலிருந்து சாமி கும்பிடுவது வ்ரை நன்றாக கற்றுக்கொண்டது! வாரம் வெள்ளி ஞாயிற்றுகிழமைகளில் ஏதெனும் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்! (ஊரைச்சுத்தி கோவில்கள் இருக்கும் எங்க ஊருல எனக்கு சாமி கும்பிடற எண்ணம் அப்ப வர்லை..!)

அப்படி ஒரு நாள் சென்ற இடம்தான் குடுமியான் மலை முருகன் கோவில்! காலையிலேயே தயிர்சாதம் புளிசாதம் என கை நிறைய் பைகளை நிரப்பிக்கொண்டு,கிளம்பியாச்சு டவுன் பஸ்ல,ஒரு ஒருமணி நேரம் போயிருக்கும் ஊர் வந்துச்சு! அண்ணாந்து பார்த்தா மலை உச்சியில ஒரு சின்ன கோவில்!

சீக்கிரம் நடங்கன்னு சொன்னதும் உற்சாகத்துல ஓடியவனை, அத்தை அதட்டும் குரலில் டேய்..! கையில செருப்பு எடுத்துக்கோ இல்லை இங்கயே போட்டுட்டு வான்னு மிரட்ட..! (செருப்பு போட்டுக்கிட்டு படியேறக்கூடாதாம்!) எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் மாதிரி கையிலன்னு படி ஆரம்பிக்கிற இடத்துலயே போட்டுட்டு படி ஏற ஆரம்பிச்சாச்சு!

கோவிலுக்கு போனா ஒருத்தரும் கிடையாது! அப்படியே இருட்டில முருகன் தெரியுறாரன்னு உத்து உத்து பார்த்துக்கிட்டுருந்தேன்..!

கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு குருக்கள் ரொம்ப பாவமா நடந்துவந்துக்கிட்டிருந்தாரு! அவருக்கு அடிவாரத்திலதான் வீடாம் யாரோ நாலு பேரு மலையேறிப்போயிருக்காங்களேன்னு பரிதாபப்பட்டு வந்தவர நானும் பரிதாபமாத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்! (சரியா கவனிக்க ஆளில்லாத கோவில்களெல்லாம் இது மாதிரி ரொம்ப பேர பார்த்துருக்கேன்! என்ன நிர்பந்த்துக்கு இவங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வந்து வேலை பார்க்கணும்ன்னு,மனசுக்குள்ள தோணும்...?)

கொஞ்ச நேரத்திலயே, கொஞ்சம் பயத்துடனே சாமி கும்பிட்டு முடிச்சு, பிரசாதம் வாங்கிக்கிட்டு,நாங்க எடுத்துவந்த சாதத்தையும்,எடுத்து வயித்த நெப்பிக்கிட்டு நல்ல புல் கட்டுல இறங்கும்போதுதான் இவ்ளோ நேரம் நான் ஆடுன ஆட்டத்துக்கு, சோதனை வந்தது! அது கோடைக்காலம்னு முன்னாடியே சொன்னோன்ல, சுமார் 11.00 மணிக்கு மேல மலைப்பாதையில நடக்கறதும், மாரியம்மன் கோவில்ல தீ மிதிக்கிறதும் ஒண்ணுதானே..!

என் அத்தை எம் மேல பரிதாபப்பட்டு ஒரு துண்டு கொடுத்தாங்க அதை எடுத்துகிட்டு வேகமா ஒடி வந்து,துண்ட போட்டு அது மேல நின்னு திரும்ப திரும்ப அது மாதிரியே செஞ்சு ஒரு வழியா வந்துசேர்ந்தேன்...!
என்ன தான் அப்ப கஷ்டப்பட்டாலும் இப்ப இங்க உக்காந்துக்கிட்டு சஷ்டியும் அதுவுமா நினைச்சு பார்க்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!

உங்களுக்கு வாய்ப்பு இருக்கா? அப்ப போய் பாத்துட்டுவாங்களேன் தமிழ்கடவுளை...!

சஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்

மயிலாடுதுறையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 9 கி.மீ செம்பனார்கோவிலிலிருந்து பிரியும் மேமாத்தூர் சாலையில் சென்றால் 3 கி.மீ இடது புறம் திரும்பி மஞ்சளாற்றின் கரைகளில் அழகான தார்சாலையில் வளைவு நெளிவுகளில் வளைந்து நெளிந்து,கொண்டேஏஏஏஎ சென்றால், சரியாக 12வது கிமீ ஒரு கோபுரம் அகலத்தில் சிறிதாக உயரமாக தெரியும்!அங்குதான் திருப்புகழ் பாடப்பெற்ற இறைவன் முருகன் காட்சி + அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் - (நேரடியாக திருக்கடையூர் வந்து, அங்கிருந்து தில்லையாடி வந்தால் எளிதாக இருந்தாலும் அதைவிட இந்த ரூட் எதுக்குன்னா? வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சாலையில் வருவதென்பது எவ்ளோ சுகமானதுன்னு அனுபவிச்சு பார்க்கத்தான்...!) தேவாரப்பாடல்களில் திருவிசைப்பாவில் பாடல் பெற்ற ஸ்தல்ம் கூடுதலாக அருணகிரிநாதரால் முருகன் அருளை பெற, திருப்புகழினால் பாடப்பெற்ற இடமும் கூட இது! புராணத்தில் சூரன் மகன் இரண்யாசுரனை அட்டாக் செய்த இடமாக கூறப்படுகிறது!

ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது.

தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது! அது மட்டுமல்லாமல் சஷ்டி விழாவும், சுற்றுபுற கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூட இங்கு வெகு விமரிசையாக நடைப்பெற்றுவருகிறது!
முன்பு பஸ் வசதி ரொம்ப குறைவாக இருந்து, கால நேரம் தெரியாமல் காத்திருந்த காலங்கள் மனதில் நினைவாடுகின்றன! அந்த பிரச்சனைகள் இப்போது இல்லவே இல்லை அடுத்தடுத்து பஸ்கள் அல்லது மினி பேருந்துகளால் அமர்க்களப்படுகின்றது!

பெரும்பாலும் திருக்கடையூர் கோவிலை தரிசிக்க வருபவர்கள் இந்த கோவிலை தவறவிடுவதில்லை! இந்த கோவில் தெற்குவீதி (மெயின் ரோடும் அதான்) பார்த்தால் தில்லையாடி சிவன் கோவில் அதற்குபக்கத்திலேயே தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் வாசலில் காந்தி சிலை!

இங்கு சென்றால், கண்டிப்பாக ஒரு மனநிம்மதியுடன் திரும்பலாம் அது உறுதி!