அப்துல் கலாம் ஆசை - நிறைவேற்ற இயலுமா?



எம்.பிக்களுக்கு படிப்பு!

ஐந்து வருட எம்.பி பதவியை ஆறு வருடங்களுக்கு அதிகரித்து, முதல் ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு,பதவியில் -மக்கள் பணியில்- சேவை(!?) செய்வது எப்படி என்று புகழ்பெற்ற கல்விநிறுவனங்களில் பயிற்சி அளிக்கலாம் என்றதொரு ஆசை யோசனையை தெரிவித்துள்ளா!

தற்போதைய எம்பிக்கள் பெரும்பாலும் தாம் சார்ந்த அரசியல்கட்சிகளின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டுவருகின்றனர்,இது போன்ற துறை சார்ந்த படிப்புகள் அவர்களை மிகசிறந்த மக்கள் தொண்டர்களாக மாற்ற உதவும் என்பது அவரது கருத்தின் சாரம்சமாகும்!


உணவு உற்பத்தி!

மேலும் உணவுப்பொருட்கள் சார்ந்த துறையில் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, உற்பத்தி திறனை பெருக்க வேண்டிய வழிமுறைகளை இப்போதிலிருந்தே தொடங்குவது அவசியமென்றும், இந்தியாவின் தற்போதைய உணவு உற்பத்தியான சுமார் 200மில்லியன் டன்கள்.

இதைவிடவும் நமக்கு தட்டுப்பாடுகள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் நாம் குறைந்தது 340 மில்லியன டன்களை உற்பத்தி இலக்காக நிர்ணயித்து,நம்மிடமுள்ள குறைந்துகொண்டிருக்கும் விளைநிலங்களை (170 மில்லியனிலிருந்து 100 மில்லியன் ஹெக்டருக்கு குறையும்) பயன்படுத்தி, குறைந்து வரும் இயற்கை வளமான தண்ணீரையும் கணக்கில் வைத்து நம் ஆராய்ச்சிக்ளை மேற்கொள்ளவேண்டியது மிக அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்!

இதெல்லாம் நம்மால முடியுமான்னு சந்தேகமாத்தான் இருக்கு?

ஆனாலும் நம்ம ஆள்தானே சொல்றாரு முடியும்னு!

நம்பிக்கையா இருப்போம்!

0 பேர் கமெண்டிட்டாங்க: