அபி அப்பாவிற்கு ஒரு HAPPY நியூஸ்..!

அரசியல் கூட்டணியின் கூட்டல் கழித்தல் கணக்குகளில் நிச்சயம் மயிலாடுதுறை தொகுதி சிதம்பரத்துடன் சங்கமமாகும் என்று மயிலாடுதுறை பாரளுமன்ற தொகுதி மக்களால் , கவலையுடன் எதிர்பார்க்கப்பட்ட, அந்நிகழ்வு, கடைசியில் நடைபெறவே இல்லை! என்பதில் மகிழ்ச்சியே..!
பல நாடுகளிலும், வாழும் மண்ணின் மைந்தர்களின் வேண்டுகோள், மற்றும் தொகுதி மக்களின் கருத்துக்கள், மற்றும் தற்கால அரசியல் நடைமுறைகளுக்குகேற்ப, இப்பிரித்து சேர்க்கும் திட்டத்திலிருந்து, மயிலாடுதுறை விடுவிக்கப்பட்டது!
ஏதோ ஒரு வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடாமலிருக்க,ஊரின் வரலாற்றுத் தொன்மையும், சமூக வரலாற்றில் ஊரின பெருமையும் தாங்கிய ஒரு வேண்டுகோள் கடிதம் தயாரித்து, அதை தொகுதி மக்கள் வாயிலாக தொகுதி பிரிப்பு குழுவிற்கு சமர்ப்பித்த தமிழ்திணையினருக்கும்,
பல நாடுகளிலிருந்து மயிலாடுதுறையின் மைந்தர்கள் அனுப்பிய வேண்டுகோள் கடிதங்களுக்கும் ,
எதுவும் செய்யாமல் இருந்ததற்காக உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும்..!
நன்றி.!
நன்றி..!!
நன்றி...!!!
ஸ்பெஷல் நன்றி.!
அபி அப்பாவுக்கு - இதுலயும் அனானிமஸா நாப்பதுக்கும் மேல மெயில் தட்டி விட்டதற்கு, இவ்விடத்தில் 'ஸ்பெஷல்' நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது..!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றிகளுடன்!

எம்பளாத்தொம்பது போய் எண்பது கூட சேருமா என்ன..!?

கான்பிடென்ஷியல்.!
அபி அப்பா கவலை வேணாம், பாரளுமன்றத்தில் இனி மயிலாடுதுறை, மயிலாடுதுறைன்னு ஒலிக்கும்!ஆனா முதல்ல பழைய மணியை சரி பண்ணனுமே?
சவுண்டே இல்லையே!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல சேதி..நன்றி..
இன்னொரு நன்றி எதுக்குன்னா பஸ்டாண்ட் படத்தை போட்டதுக்கு... :)