நீயெல்லாம் ஒரு....!

முந்தா..நேத்து சைட்ல, கடுமையான வேலை எல்லாம் முடிச்சுட்டு, வந்து அச்தியில அப்படியே கட்டைய சாச்சி, நல்லா தூங்கிகிட்டு இருக்கும்போது..!.

எனக்கு தமிழ்மண்த்துலேர்ந்து ஒரு கடுதாசி - இல்ல - மெயிலுன்னு வைச்சிப்போம்.!
அதுல, "தாங்கள் இதுவரை பதிந்த எந்த பதிவுகளும்,ஒரு பின்னூட்டமுமின்றி இருப்பதாலும், மூத்த பதிவர்கள் - மன்னிக்கவும் - மொத்த பதிவர்களுமே, இதுவரை ஒரு சிரிப்பான்கூட போடாத நிலையில், தங்களால் தமிழுக்கோ அல்லது தமிழ்மணத்திற்கோ, ஒரு பிரயோசனமும் இல்லை என்பதாலும், தாங்களாகவே பதிவு போடுவதை நிறுத்திக்கொள்ளும்படி தமிழ்மணம் முதலில் அன்புடன் கேட்டுக்கொள்கிறது, இதன் மூலம் எதிர்கால சந்ததிக்கு வழி விட்ட பெருமை உங்களையே சாரும் என்பதனையும் இச்சமயத்தில், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்"
நன்றி..!
இப்படிக்கு,
தமிழ்மணம் நிர்வாகிகள்.

ஐய்யயோ..!.ஐய்யயோ...!
நான் முன்றரை வருசமா, குந்த வைச்சு உக்காந்துக்கிட்டு, பாக்குற சைட்லேருந்து, எதாவது பாராட்டு வருமுனு பார்த்தா, இப்படி, ஆப்பு அனுப்பிச்ச்ட்டாங்களே! நான் என்ன பெரிசா குத்தம் பண்ணிட்டேன், ஆபிஸ்ல பொழுது போகம இருக்கறப்ப,நோட் பேடுல எழுதி கிறுக்கறத அப்படியே நெட்டி(ல்லி)ட்டேன்!
அதுக்கு போயி இப்படியா..!
சரி விடுங்கப்பா..என்னோட 'சேவைய' நான் வெள்ளை பேப்பரிலேயே ப்ரிண்ட் எடுத்து பார்த்துக்குறேன்!
பயங்கர கோபத்தோட, கடைசியா ஒரு தரம் பார்த்துட்டு, நம்ம கம்பெனிய மூடிடுவோமுனு, என்னோட வலைப்பக்கத்தை ஒபன் பண்ணினா, உண்மையிலேயே கமெண்ட் இருக்கற இடத்தை காணலைங்கோஓஓஓ...!
அனேகமா பிளாக்கர்காரங்க புடிங்கிவிட்டுருப்பாங்கன்னு நெனைக்கிறென்! (நான் தமிழ வளக்கறதுல எவ்ளோ பிரச்சனை பாருங்க!)

இது எல்லாத்தையும், என் உயிர் நண்பங்கிட்ட 'சாட்'டியதுக்கு அவன் அனுப்பிச்ச படம் & வாசகம் இதுதான்...!

Photo Sharing and Video Hosting at Photobucket

நீயெல்லாம் ஒரு ஆளு... த்தூ..!