பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!




பத்தாவது முடிச்ச கையோட பாலிடெக்னிக்ல சேர்ந்த புதுசு முதன் முதலா பொம்பளை புள்ளைங்க கூட சேர்ந்து படிக்கற கிளாசுல உக்கார இடம் வேற கிடைச்சிருந்தாலும் மனசு மகிழ்ச்சியா இல்ல காரணம் அட்மிஷன் நான் நினைச்ச காலேஜ்ல கிடைக்கலன்னுதான்! [சரி அந்த கதையை இப்ப ரொம்ப விரிவா சொல்லமுடியாது!]

இப்ப டைட்டிலுக்கு வருவோம்! முதல் வருசம் முழுசா கணக்கு வாத்தியார்க்கிட்டயும், கெமிஸ்ட்ரி & டிராயிங்க் வாத்தியார்ங்ககிட்டயும் மல்லுகட்டி படிச்சு ஒரு வழியா ரெண்டாவது வருசம் ஒதுக்கப்பட்ட டிபார்மெண்ட்ல வந்து உக்காந்தாச்சு! முதல் வருசமாச்சும் ஒரளவுக்கு 60:40 விகிதத்தில பெண்களும் ஆண்களும் இருந்த வகுப்பு! ரெண்டாவது வருசம் எங்களோட பழமையான டிபார்மெண்ட்டுக்கு முதல் நாள் வந்த விகிதாச்சாரம் கூட அதே ரேஞ்சுதான் ஆனா ஒரு வாரத்துல பெரும் கும்பலே பொட்டி தட்டுற கிளாசுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாங்க எங்க கிளாஸ்ல : 24 பெ:5 ஆகிப்போச்சு!

ஒரு வழியா தட்டு தடுமாறி,கான்கீரிட் சும்மா அளந்து அளந்து கொட்டி,ஹைட்ராலிக்ஸ் லேப்ல சாக்கடை தண்ணீர்க்கு சகலமும் கண்டுபுடிச்சு இது நல்ல தண்ணி கிடையாது குடிக்கப்புடாதுன்னு நிறையா தெரிஞ்சுக்கிட்டு மூணாவது வருசம் வந்து சேர்ந்தோம்!

அந்த நேரத்துல டிபார்மெண்ட் ஹெட் ரிடையர்ட்மெண்ட் வந்து ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து பிரிவுபசார விழா செய்யுறதா ப்ளான் பண்ணி பயபுள்ளைங்க எவனாச்சும் அவர பத்தி நாலு வார்த்தை நல்லவிதமா பேசணும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க! எல்லாருக்கும் முன்னாடி பேசுறதுன்னா பசங்க பயங்கர டெரர் ஆகிட்டாங்க!அது மட்டுமில்ல அந்த பைவ் ஸ்டார்களில் ஒரு ஸ்டாரை கரீக்ட் செய்யவும் பயங்கர போட்டி வேற..! ஸோ எதாச்சும் செஞ்சு அசிங்கப்பட்டுக்ககூடாதுன்னு ஒரு நல்ல எண்ணமும் !

நான் மட்டும் தைரியமா, என்னோட ப்ரெண்ட்டுக்கிட்ட கவலைப்படாத நண்பா டோண்ட் ஓர்ரி நான் ஸ்கிரிப்ட் எழுதி தாரேன் நீ மேடைக்கு போற, நிக்கிற, சரசரன்னு பேப்பர்ல இருக்கிறதை படிச்சுட்டு வர்ற; டீல் .கேவான்னு கேட்டு .கே வாங்கிட்டேன்! அவனும் எதோ ஒரு நினைப்புல .கேவும் சொல்லிட்டான்!

சரி நாம என்ன எழுதறதுன்னு யோசிச்சு யோசிச்சு ம்ஹும் இது சரி வராது வழக்கமா அரசியல்வாதிங்க மாதிரி ஆரம்பிச்சுடவேண்டியதுதான்ன்னு இங்கு வீற்றிருக்கும் துறை தலைவரே,துறை ஆசிரியர்களே, மாணவ மாணவிகளேன்னு சொல்லி முடிச்சப்பிறகு என்னா சொல்றதுன்னு ரோலிங்க் ஆக ஆரம்பிச்சுடுச்சு!

ரிடையர்ட்மெண்ட் ஆகற வாத்தியார பத்தி எதாச்சும் சொல்லணும்ல? யோசிச்சா ஒண்ணும் வரமாட்டிக்கிது,அப்படியே வந்தாலும் அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது! யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு! நாலு வரிதான் நாலே வரிதான் டக்கரா சூட் ஆகிடுச்சு!(எந்த படம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்,
விண்ணை நீலம் பிரிந்தாலும்,
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் அப்படின்னு கொண்டு போய்ட்டு, நீங்க சொல்லிக்கொடுத்த படிப்பை மறக்க மாட்டோம், அப்புறம் காலேஜை மறக்கமாட்டோம், இப்படியே ஒரு கண்ட்ரோலே இல்லாம போய்க்கிட்டே இருக்க, ஒருவழியா பதட்டத்தை குறைச்சு,அத்தோட முடிச்சுகிட்டு,பேப்பரை நாலா மடிச்சு கையில வைச்சுக்கிட்டா தெரியாதுன்னு ஐடியாவும் கொடுத்தாச்சு!

பங்ஷன் அன்னிக்கு பயபுள்ள சொன்னமாதிரியே எல்லாமும் செஞ்சுடுச்சு,அதுமட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா நாலஞ்சு பிட்டை போட்டு பேசுனதுமில்லாம, ஒரு இடத்துல நிக்காம ,லெப்ட்ல ஒரு ரெண்டு அடி ரைட்டுல ஒரு ரெண்டு அடி பின்னாடி முன்னாடின்னு ஒரு வட்ட ஆட்டமே போட்டுட்டான்!அதை பார்த்த பைவ் ஸ்டார்ஸ் மட்டுமில்ல எல்லாருக்குமே ஒரு சந்தோஷ புன்னகை பூக்க....!

நண்பா நல்லா பேசுனேனாடா!

.கேடா நல்லா பேசுன, அதை விட நீ டான்ஸ் ஆடிக்கிட்டே பேசுனதுதான் கலக்கல்ன்னு பெருமையா சொல்ல..

ஆமாண்டா பைவ் ஸ்டார்ஸும் பாராட்டுனாங்க! தாங்க்ஸ்டா அந்த அஞ்சுல ஒண்ணு என்கிட்ட வந்து நல்லா பேசுனீங்க ஆனா ஆட்டத்தை கொறைங்கன்னு சொல்லிட்டு போனாங்கடா, நண்பா நான் இன்னியிலேர்ந்து அவங்களை லவ் பண்றேண்டா....!?

நீயுமாடா....?!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

36 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பதிவை படிச்சுட்டு வந்துடவா...?

:)

said...

//ஆமாண்டா பைவ் ஸ்டார்ஸும் பாராட்டுனாங்க! தாங்க்ஸ்டா அந்த அஞ்சுல ஒண்ணு என்கிட்ட வந்து நல்லா பேசுனீங்க ஆனா ஆட்டத்தை கொறைங்கன்னு சொல்லிட்டு போனாங்கடா, நண்பா நான் இன்னியிலேர்ந்து அவங்களை லவ் பண்றேண்டா....!?

நீயுமாடா....?!//

:))

said...

;)))))))))))))))

என் சுவாச காற்றே ;)

said...

என்ன பாட்டு??? :(((

said...

:))))))))))))))))

said...

:-)))

said...

ஹாஹா அப்போ அவர் ஓரிடத்தில் நிண்டு பேசமாட்டார். நீயுமாடா என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் தொக்கி நிற்கின்றன

said...

:))

said...

நீயுமாடா....?!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ///

அப்ப நீங்களுமாங்களா....!!!!!!!!!!

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது! யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு! //

பாஸ் உங்களுக்கு பதிவுக்கு மேட்டர் எப்படி மாட்டுதுன்னு எனக்கும் சிக்கிடுச்சு பாஸ்

said...

வந்தியத்தேவன் said...
ஹாஹா அப்போ அவர் ஓரிடத்தில் நிண்டு பேசமாட்டார். நீயுமாடா என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் தொக்கி நிற்கின்றன //

மன்னிக்கவும் தொக்கியெல்லாம் நிக்கலை.

சரியாக நேருக்கு நேராகத் ஆயில்ஸ் தன் எதிரே நிற்கும் நண்பனை நோக்கி நிற்கிறது :))))))))

said...

நிஜமா நல்லவன் said...
:))))))))))))))))


ஏம் பாஸ் இம்புட்டு சிரிப்பு.. அந்த பாட்டு டேன்ஸ் நண்பர் நீங்களா :))))))))))))))))))))))

said...

/ அமிர்தவர்ஷினி அம்மா said...

நிஜமா நல்லவன் said...
:))))))))))))))))


ஏம் பாஸ் இம்புட்டு சிரிப்பு.. அந்த பாட்டு டேன்ஸ் நண்பர் நீங்களா :))))))))))))))))))))))/


அவ்வ்வ்வ்வ்வ்வ்...

said...

;-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

said...

// தமிழன்-கறுப்பி... said...

பதிவை படிச்சுட்டு வந்துடவா...?

:)//

கண்டிப்பா ராசா!

said...

//தஞ்சாவூரான் said...

//ஆமாண்டா பைவ் ஸ்டார்ஸும் பாராட்டுனாங்க! தாங்க்ஸ்டா அந்த அஞ்சுல ஒண்ணு என்கிட்ட வந்து நல்லா பேசுனீங்க ஆனா ஆட்டத்தை கொறைங்கன்னு சொல்லிட்டு போனாங்கடா, நண்பா நான் இன்னியிலேர்ந்து அவங்களை லவ் பண்றேண்டா....!?

நீயுமாடா....?!//

:))//

நன்றி அண்ணே!

said...

//கோபிநாத் said...

;)))))))))))))))

என் சுவாச காற்றே ;)//

சிரிச்சது போதும் சொன்னது என்ன? சம்பந்தமில்லாம இருக்கு!

said...

/ஸ்ரீமதி said...

என்ன பாட்டு??? :(((//

ம்ஹுக்கும் நீங்க GK இம்ப்ரூவ் பண்ணியே ஆகணும் தங்கச்சி! :)

said...

// நிஜமா நல்லவன் said...

:))))))))))))))))/

நன்றி தம்பி!

said...

//Anbu said...

:-)))//

நன்றி தம்பி!

said...

//வந்தியத்தேவன் said...

ஹாஹா அப்போ அவர் ஓரிடத்தில் நிண்டு பேசமாட்டார். நீயுமாடா என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் தொக்கி நிற்கின்றன//

:) நன்றி வந்தியத்தேவன்

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது! யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு! //

பாஸ் உங்களுக்கு பதிவுக்கு மேட்டர் எப்படி மாட்டுதுன்னு எனக்கும் சிக்கிடுச்சு பாஸ்//

கிகிகிகி :)))

said...

//Blogger அமுதா said...

:))/

நன்றி அக்கா!

:)

said...

//Blogger நாணல் said...

:)))//

நன்றி நாணல் :)

said...

// கானா பிரபா said...

;-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))//

ஆஹா ஏன் பாஸ் இம்புட்டு பெருசா சிரிக்கிறீக எனி உள்குத்ஸ்?

said...

/கானா பிரபா said...

;-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

/

ரி்ப்பீட்டு!!

said...

/நீயுமாடா....?!/

பாஸ்....அப்படியே இன்னும் கொஞ்சம் ஃபீல் பண்ணுங்க..உண்மையெல்லாம் வெளிலே எடுத்து விடுங்க!! :))

said...

/
மண்ணை வேர்கள் பிரிந்தாலும்,
விண்ணை நீலம் பிரிந்தாலும்,
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்/

அண்ணாவோட ஆட்டோகிராஃப் நோட்தானே பாஸ்!! :))

said...

பதிவுக்கு ஒரு ஸ்மைலி ..

"ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" பாட்டு தானே அது ? .. :) .. ஸ்ஸப்பா என்னோட GK'வ பாத்து எனக்கே புல்லரிக்குது ..

said...

//சந்தனமுல்லை said...

/நீயுமாடா....?!/

பாஸ்....அப்படியே இன்னும் கொஞ்சம் ஃபீல் பண்ணுங்க..உண்மையெல்லாம் வெளிலே எடுத்து விடுங்க!! :))//

அவ்வ்வ்வ்வ்வ்வ் பாஸ் நான் ஒரு திறந்த புத்தகம் :))

said...

// சந்தனமுல்லை said...

/
மண்ணை வேர்கள் பிரிந்தாலும்,
விண்ணை நீலம் பிரிந்தாலும்,
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்/

அண்ணாவோட ஆட்டோகிராஃப் நோட்தானே பாஸ்!! :))//

அட இல்ல பாஸ் படத்துல வர்ற பாட்டுதான் ! :)

said...

// Sampath said...

பதிவுக்கு ஒரு ஸ்மைலி ..

"ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" பாட்டு தானே அது ? .. :) .. ஸ்ஸப்பா என்னோட GK'வ பாத்து எனக்கே புல்லரிக்குது .//

கலக்கல் நீங்க தான் பாஸ் சொல்லியிருக்கீங்க உங்களோட ஜி.கேவை நினைச்சா பெருமையா இருக்கு !!!

:)

said...

முதல் வருகையே புன்னகையை அள்ளித் தந்து விட்டது.

வாழ்த்துக்கள்.

பின்னாடியே துரத்த ஆரம்பிச்சிட்டேன்.
(Following your blog. :-) )

said...

/அப்படியே வந்தாலும் அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது/
ஹாஹாஹா..கலக்கல்ஸ் ஆயில்யன்

said...

enna boss, epo padhivu podaringa, epo comment vangaringane theriya matengudhu enakku!! minnal vegathula nadakudhu ellam. sari poi padhivai padichitu varen..

said...

hahahaha.. aiyo thananthaniya sunday aniku oppicela ukkandhu sirikka vechutingale boss? iruvar padam paatu HOD ka? haiyo haiyo.. ponga boss!