இனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!



மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

சேவை என்று தெரியாமலே, அனைவரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை... இத்யாதி இருக்கின்றன. 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

ஒரு லாப- நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால், போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்... நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.

அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல், சத்தியத்தாலும், நியமத்தாலும் காக்க வேண்டும்.

உதவி செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியம். மான- அவமானத்தை பொருட்படுத்தாத குணமும் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிட வேண்டும்.

'வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா' என்று கேட்பீர்கள்.

உங்களுக்குச் சொல்கிறேன்; பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.

கண்ணதாசனிடமிருந்து,

அர்த்தமுள்ள இந்து மதத்தின் வழியாக...!

31 பேர் கமெண்டிட்டாங்க:

said...

/"இனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!"/

சரிண்ணே....!

said...

//பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.//

நல்ல கருத்து. எல்லோரும் அந்த இன்பத்தைப் பெறுவோம். வாழ்த்துக்கள் ஆயில்யன்!

said...

வாழ்த்துக்கள் பாஸ்

உங்கப்பா நினைச்சது போல வி‍வேகானந்தர் அளவுக்கு வளர ஆசைப்படுறீங்க போல ;)

புதிய ஆண்டில் ஞாயிறு ஸ்ரேயா பதிவுகள் தொடரணும் பாஸ்

said...

Advanced wishes for new year.. :))

said...

//மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.//

ஆமா.. என் பாட்டி கூட சொல்லிருகாங்க.. :))

said...

//சேவை என்று தெரியாமலே, அனைவரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம்.//

இது எனக்கு புரியல :((

said...

//அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!//

ஒரு குடும்பத்துக்கு சேவை செய்யறதுக்கே ஒரு பாக்கெட் சேமியா வேணும்.. இவ்ளோ பேருக்கும் செய்யனும்னா எவ்ளோ பாக்கெட் வேணுமோ????? அம்மாடி... அப்பறம் உப்பு, மிளகாய், தண்ணி இன்னும் எவ்ளோவோ.. உலக வங்கில கூட கடன் தர மாட்டாங்க..

said...

//நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை... இத்யாதி இருக்கின்றன. 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.//

உண்மை :))

said...

//பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. //

ஹை கண்ணதாசன் அங்கிள் கூட ஆயில்ஸ் அண்ணா மாதிரியே "திங்கிறது"ன்னு எழுதிருக்காரு.. :))))))))

said...

நல்லாருக்கு :)))))))

said...

நல்ல பதிவு...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

said...

/* 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.*/
உண்மை. நல்ல பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

ம், நல்ல விஷயமே, தொடருவோம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

ஸ்ரீமதி said...
//பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. //

ஹை கண்ணதாசன் அங்கிள் கூட ஆயில்ஸ் அண்ணா மாதிரியே "திங்கிறது"ன்னு எழுதிருக்காரு.. :))))))))

ரிப்பீட்ட்டே
(தயவு செய்து.........................)

said...

இன்னும் முல்லை அக்கா வரலை போல ரிப்பீட்டு போடற்துக்கு ஸ்ரீமதியின் கமெண்ட்டுக்கு//

said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

அப்புறம் என்னையும் மதிச்சு, அதாவது என் வலைப்பதிவையும் மதிச்சு பின்தொடருவதற்கு நன்றிங்க :-)

said...

நல்ல பதிவு.. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆயில்ஸ். :)

said...

//உங்களுக்குச் சொல்கிறேன்; பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.
//

முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறீர்கள்....

அருமை !!! அருமை !!!!

said...

நல்ல விஷயம் ஆயில்யன்.
எங்களுக்குள் எத்தனயோ பிரச்சனைகள் இருந்தாலும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்யவே என் விருப்பம்.முடிந்தவரை செய்வேன்.
நல்லவளாக வாழவும் செய்வேன்.
ஆயில்யன்,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிறைவாய்.

said...

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு !!!

வழிமொழிகிறேன்...!!!

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

said...

"பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்." உண்மையான கூற்று. புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

///நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்///
ஆம் நண்பரே,,உண்மை தான்... யாமும் சாரல்(Saaral) என்ற Orkut Community ல் சேர்ந்து ஆதரவற்றோருக்காக உதவி புரிகிறோம்..விருப்பமுல்லோர் இணையவும்...http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

said...

நல்ல கருத்து.. :)

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆயில்யன் அண்ணா..

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆயிலன்

said...

//
அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!
//


ரொம்ப அருமையான கருத்துங்க
இதை எல்லாரும் கடை பிடித்தோமேயானால்
கஷ்டபடுவோரின் கஷ்டங்கள் குறையும்

said...

இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துகள் !!!

said...

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.
மிக நன்றி தோழரே.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

அருமையான சிந்தனை ஆயில்ஸ் - கவியரசின் சிந்தனையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் - முடியும் - இயன்ற வரை கடைப்பிடிக்கலாம். செய்வோம்

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆயில்யன்


Tharani priya