அதெல்லாம் முடியாது நான் படிக்கணும்!




தேவையா இதெல்லாம்...!

தேவையே இல்லை!

கட்டாயமும் கிடையாது!

அட நல்ல பேரும் கூட வராதுங்க!

அப்புறம் எதுக்குங்க இந்த கிழவன் நான் படிச்சே ஆவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியிறாரு...?

அதான் மேட்டரூ!

ஒரு விசயத்துமேல ஆசை வைச்சுட்டாரு அதை அடைஞ்சே தீருவேன்னு முடிவும் பண்ணிட்டாரு! அதிகாரமா கேட்கறதுக்கும் ஆள் இல்லாதப்ப படிச்சு பார்த்துடவேண்டியதுதானேன்னு களமிறங்கிட்டாரு! ஆனாலும் இத்தனை வருசமாவா படிக்கிறாருன்னு எல்லாருமே மூக்கு மேல விரலு வைக்கிற அளவுக்கு மனுசன் திரும்ப திரும்ப படிச்சிக்கிட்டே இருக்காரு! பரீட்சை எழுதிக்கிட்டே இருக்காரு!

இன்னும் சொல்லப்போனா விசு படத்து வசனத்தை கூட நாம இவருக்காக யூஸ் பண்ணிக்கிலாம்!

பரீட்சை எழுதினார்;
பரீட்சை எழுதுகிறார்;
பரீட்சை எழுதுவார் - இறைவன் கருணையிலால்......!

ஆனாலும் கூட இவுரு இத்தினி வருஷம் படிச்சுக்கிட்டே ( சரியா படிக்கலைன்னாம் கூட படிச்சிக்கிட்டித்தான் இருக்காரம்!) பரீட்சை எழுதினாலும்,கூட ஆசிரியர்களும் கொஞ்சம் கூட பெருந்தன்மை காட்டாம எழுது ராசா! எழுதுன்னுத்தான் இன்னுமும் பெயிலாக்கிக்கிட்டே வராங்களாம்! :( (அந்தளவுக்கு அவரது படிப்பு இருக்கறது வேற விஷயம்! - உலகத்திலேயே அதிகமான முறை ஒரே கிளாஸ்ல பெயிலான ஆளு இவராத்தான் இருக்கும் போல!)

எல்லாத்துக்கும் மேல கிட்டதட்ட 78 வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம - படிப்பை கல்யாணம் பண்ணிக்கிட்ட - பரீட்சை எழுதி பாஸ் பண்ணிட்ட பிறகுதான் கல்யாணமே பண்ணிப்பேன்னு சொல்ற இந்த தாத்தா சிவ சரண் ராஜஸ்தான் இருக்காரு 1969ல பரீட்சை எழுத ஆரம்பிச்சவராம்!

சரி தாத்தா ஒரு வேளை அப்படியே நீங்க பாஸ் பண்ணிட்டாலும் இப்ப இந்த வயசுல போய் கல்யாணம் பண்ணிக்கற ஆசை இருக்கானு கேட்டதுக்கு அவுரு சொன்ன பதில்!

கண்டிப்பா அதுக்குத்தானே இத்தினி வருஷமா கஷ்டப்பட்டு படிக்கிறேன்! ஒரு 20 - 25 வயசுக்குள்ள இருக்கற பொண்ணா பார்த்து கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்! (என்னா நெனைப்பு பாருங்களேன்!!)

அது எப்படியோ போகட்டும்! கல்வி மேல இம்புட்டு ஆசை வைச்சிருக்கற இந்த தாத்தா கண்டிப்பா இந்த வருசமாவது பாஸ் பண்ணட்டும்ன்னு நாம சாமிக்கிட்ட வேண்டிக்குவோம்!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the first.

said...

அது எப்படியோ போகட்டும்! கல்வி மேல இம்புட்டு ஆசை வைச்சிருக்கற இந்த தாத்தா கண்டிப்பா இந்த வருசமாவது பாஸ் பண்ணட்டும்ன்னு நாம சாமிக்கிட்ட வேண்டிக்குவோம்!


வாழ்த்துக்களுடன் வழி மொழிகிறேன்

said...

தாத்தா கண்டிப்பா இந்த வருசமாவது பாஸ் பண்ணட்டும்ன்னு நாம சாமிக்கிட்ட வேண்டிக்குவோம்!

Anonymous said...

முயற்சி திருவினையாக்கட்டும்.