
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..!
இதயத்தை கயிறு கட்டி கேரளா பக்கம் இழுத்தவள் இவளோ...!
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..
அது என்னென்று அறியேனடி...?
கண்ணே உன்னை காட்டியதால்
எனக்கு கேரளா சிறந்ததடி!!!!!
டிஸ்கி -1:- கேரளத்து புது வரவு இந்த அம்மிணி பேருதான் ஆயில்யா!
டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!
அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா...!
# ஆயில்யன் 73 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யா, மாமியார் வீடு
மங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்களோடு, ஓணம் ஸ்பெஷலும்...!
இன்று இல்லறம் ஏற்கும், நட்பில் சகோதரனாய் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்களுடன்...!
தமிழ் மறையில் சில திருமண வாழ்த்து குறள்களுடன்...!
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
நன்றி:- யாழ்
(பய புள்ளைக்கு என்னா குஷி பாருங்களேன்!!!)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இது ஓணம் ஸ்பெஷல்!
# ஆயில்யன் 15 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மாமியார் வீடு, வாழ்த்து
கேரளம் - என் விருப்பம் நிறைவேறுமா...?
ஒவ்வொரும் முறையும் என் எண்ணங்களில் இந்த விருப்பத்தினை எப்படி நான் தவறவிடுவேனோ...?! என்று தெரியவில்லை ஆனாலும் என்னால் இது நாள் வரையில் கேரளாவிலிருந்து செல்லும் சமயங்களில் நான் நினைத்த அந்த விருப்பத்தினை மட்டும் செய்யவே முடியவில்லை! ஆனாலும் கண்டிப்பாக மனதிற்குள் ஒரு எண்ணம் வளர்ந்தோங்கி இருக்கிறது எப்படியாகிலும் நான் இந்த விடுமுறை பயணத்தில் அந்த விருப்பத்தினை நிறைவேற்றியே தீர்வேன் என்று முடிவுடனேயே இருக்கிறேன்! ஆண்டவன் கருணையும் கூட வேண்டி...!
நான் மட்டுமில்லைங்க, பெரும்பாலும் கேரளா சுற்றுப்பயணம் செல்பவர்களுக்கும் கூட இதே எண்ணம், இருக்கும் பலர் எண்ணத்தினை நிறைவேற்றி மகிழ்ந்திருப்பார்கள்! மகிழ்ந்துக்கொண்டும் இருப்பார்கள்!
என்னதான் நம் தமிழ்நாட்டிலும் கூட இந்த விருப்பத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றாலும் கூட, அந்தளவுக்கு கேரளாவின் தனித்தன்மையினை இங்கு நாம் காண்பது மிககடினம்!
எத்தனை எத்தனை அழகாய்....! வடிக்கப்பட்ட சிலையினை போலவே தோன்றும் அந்த உருவத்தினை வீட்டின் மையத்தில் (அதாவது ஹாலில்!) மாட்டி வைத்து பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் விஸ்வரூபமான உருவத்தில், நீங்களும் பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கும் அதன் மீது விருப்பம் வந்துவிடக்கூடும்!
மூங்கில் பட்டைகளினால் செய்யப்பட்ட காலண்டரின் வடிவினை ஒத்து இருக்கும் அந்த படம் -ஒவியத்தில் உயிர் கொடுத்தது போன்ற தோற்றத்துடன் அழகாய் நிற்கும் அந்த உருவத்திற்கு பெயர் கூட எனக்கு தெரியுமே..!
கேசவன்!

குருவாயூரில் போய் கேசவன் ஆணை (யானை) அப்படின்னு சும்மா சொன்னாலே போதும் அங்கு இருக்கும் எண்டே தேசத்துக்காரர்களுக்கு ஒரு வித தெய்வபக்தி + மரியாதையோடுதான் அந்த யானையினை பற்றி பேசுவார்கள்!
அப்படி ஒரு ராஜ மரியாதையோடு இன்னும் உருவத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பெரிய உருவம் மறைந்தது 1976ல் தனது 72 வது வயதில் ஒரு நல்ல நாளில் கடவுளினை தும்பிக்கையினால் துதித்தபடியே ஆலய வாசலிலேயே அமரத்துவம் பெற்றது!
இன்றும் கூட கேசவன் படமிட்ட அந்த ஒவிய பதாகைகளுக்கும் பலத்த கிராக்கி உண்டு ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளுக்கு இணையான அந்தஸ்து பெற்றுள்ளது!
நம் தமிழ்நாட்டிலிருந்தும் கூட சுற்றுலா கேரளா செல்லும் மக்கள் கண்டிப்பாக இந்த ஒவியத்தினை வாங்கிவர மறக்க மாட்டர்கள்! அவ்ளோ பிரபலமாக நம் ஊர்களிலும் வீடுகளில் நீங்கள் காணமுடியும்!
இந்த வருடத்திலாவது கேரள சுற்றுபயணத்தில் என் எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற ஆசையுடன்.....!

டிஸ்கி:-
என்னாடா..! திடீருன்னு கேசவன் மேல பாச மழை பொழியிறேன்னு பாக்குறீங்களா? ஒண்ணுமில்லைங்க இன்னிக்கு நம்ம தேசத்து தமிழ் நடிகை திவ்யா உன்னியோட நடனம் பார்த்துக்கிட்டே இருந்தேனா?
சரி அவுங்கள பத்தி எழுதலாம்னு யோசிச்சேன்! ஆனா பாருங்க பாவம் நல்ல நடிகை ஆனா சீக்கிரமே ஃபீல்டு அவுட்டாகிட்டாங்க!(இப்ப பரத நாட்டியம் ஸ்கூல் வைச்சு நடத்துறாங்களாம்!) சரி அவுங்கள பத்தி பேசி என்ன பிரயோசனம்ம்னு அவங்க பரத நடனத்தில் பின்புறம் ராஜ கம்பீரததுடன் நின்னுக்கிட்டிருந்த கேசவன் ஞாபகம் வந்துடுச்சி!
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
Labels: 1ம்இல்லை, நினைவுகளில்.., மாமியார் வீடு
இன்னிக்கு பாவனாவுக்கு பர்த்டேய்ய்ய்! :-))


உன் வெள்ளிகொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ அழகிப்போட்டியில்
கலந்துக்கொண்டால்
அழகே தோற்றுப்போகும்
நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப்போகும்
நிலவை நீயும் கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்
போகும்!
நன்றி - கவிப்பேரரசு!
மலையாளகிளியே
தமிழ் பேசும் சகியே
நீ வாழ்க பல்லாண்டு !
******
பதிவுக்கு ஊக்கம் கொடுத்த கானாவுக்கும் சென்ஷிக்கும்
நன்றி!
நன்றி!
நன்றி!!
# ஆயில்யன் 78 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மாமியார் வீடு, வாழ்த்து
கேரளம் - எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தலத்திலிருந்து......!
நம்ம என்னதான் குறை சொன்னாலும் பாருங்க எனக்கு வல்லிய இஷ்டமாயீட்ட பூமியிலேர்ந்துதான் மக்கள் - பெரும்பாலும் ஆண்கள் - போய் காலகணக்கின்றி சம்பாத்தியம் அரபு நாட்டு காசை அன்னை மண்ணுக்கு அனுப்போ அனுப்புன்னு அனுப்பிக்கிட்டே இருக்காங்களாம்!
இந்த மாதிரி மாநிலத்தோட வருவாயின் மூன்றாவது சோர்ஸாக எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தல மக்கள் ,அங்க நினைச்ச நேரத்துக்கு ஸ்ட்ரைக்கு பண்ண முடியுது நினைச்ச நேரத்துக்கு மழைப்பெய்து நினைச்சு நினைச்சு பெருமூச்சு விடும் அளவுக்கு அழகிய பெண்களின் அவதாரங்கள் அந்த பூமியில் திகழ்ந்துக்கிட்டிருக்கு!
வெளிநாடுகளிலிருந்து எண்ட கேரளத்து மக்களிடமிருநது வரும் தொகை சுமாராக 40சதவீகிதம் வெளிநாட்டு வருவாயாக உள்ளதாம் நம் தேசத்துக்கு !
2 மில்லியன் மக்கள் நிரந்தரமாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்களாம்,சுமார் ஒரு மில்லியன் மக்கள் சும்மா போய்க்கிட்டும் வருமானத்தை சம்பாதித்து வந்துக்கொண்டும் இருக்கிறார்களாம்!
இந்த மக்களின் உழைப்பில் பெறும் பணம் கேரளாவின் வளர்ச்சியை எளிதாக எடைப்போட்டுக்காட்டுகிறதாம், பெருகிவரும் கட்டிடங்கள் வியாபார ஸ்தலங்கள் மக்களின் வாங்கும் தன்மை பெருகுதல் என எல்லாவற்றிலும் அயல்நாட்டு பணம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.
பலரும் தாம் அரபு மண்ணில் சம்பாதித்த பணத்தை கொண்டு அன்னை மண்ணில் அழகிய வேலைப்பாடுகளமைந்த பழங்காலத்து முறையிலமைந்த வீடுகளை கட்டி மினி அரபு தேசமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்களாம்!
எனக்கும் கூட ஆசைதான்! யாராவது வீடு ”கட்டி” தருவார்களா..?
குறிப்பு:-
மக்கா! யாருக்காவது பொறாமை இருந்தா மெதுவா அந்த ஆமைய ஒட்டிக்கிட்டு அந்தாண்ட போயிடுங்க அதவிட்டுட்டு, என்ன ஆயில்யன் உங்க சேச்சிங்க போட்டோவா போட்டுருக்கீங்கன்னு? எதாவது சவுண்ட் வந்துச்சு.....?!
# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க
Labels: தகவல், மாமியார் வீடு
கடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..!
பம்பாய் படத்தில் ஒரு பாடலில் இந்த கோட்டை வந்த பிறகே சுற்றுலாதளமாக பிரபலாமாக தொடங்கியது!
அது ஒரு மழைக்கால நேரமாக இருக்கக்கூடும்! எங்கும் பார்த்தீர்களென்றால் ஒரே பச்சைப்பசேல்தான்! நாங்கள் சென்றிருந்த நேரம் பச்சை புல்வெளிகளை காண் இயலாமல் ஏமாந்தாலும்,அவ்ளோ பெரிய கோட்டை மற்றும் கோட்டை சுவர்கள்,சுரங்கபாதை என கண்டு மனம் மகிழ்ந்தோம்..!
பாட்டுக்கேற்ற லொக்கேஷந்தான் நீங்கள் கூட வாய்ப்பு கிடைத்து போனீங்கன்னா உங்களுக்கும் கூட வரலாம் ஸேம் ஃபீலிங்க்ஸ்!
அந்த கோட்டையை சுற்றி எடுத்திருப்பார்கள் அந்த பாடலில், சுரங்கத்தில் நுழைந்து, நீண்ட தூரம் ஒடி வந்து சிறு மதில் துவாரம் வழியே கீழே நிற்கும், அர்விந்த் சாமியை விழுங்கும் கேமிரா!
இருவரும் கடைசியாக சந்திக்கும் இடம் தான் ஸ்பெஷல் லெக்கோஷன்! கடல் அலைகள் நம்மை உரசிச்செல்லும் அந்த சிறிய அழகிய கோட்டை மதில்கள்!
மதில் சுவர்களை ஆவேசமாக வந்து முத்தமிட்டு செல்லும் அலைகளின் பின்ணணியில், யாராவது ஜோடி கண்டிப்பாக போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள்! – டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்ன?!
டைரக்டர் மணிரத்னமும் சரி, கேமராமேன் ராஜீவ்மேனனும் சரி, ரொம்ப ஃபீல் பண்ணி எடுத்த இடம்தான் அது இப்பவும் நீங்க அங்க போனீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு பீலிங்ஸாத்தான் இருக்கும்!
வரலாற்று சுவடுகளின் படி விஜயநகர அரசால் அமைக்கப்ப்ட்ட சந்திரகிரி,பெக்கல் கோட்டைகள் எதிரிகளிடமிருந்து மலபாரினை காக்கும் பொருட்டு, செயல்பட்டு வந்துள்ளது! கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது!
பவுர்ணமி நாட்களில், நிலா வெளிச்சத்தில் அலையை ரசிக்க, அழகை ரசிக்க கூட்டம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது! கடவுளின் தேசத்தில்! (கடவுளே என்னையும் அழைத்துக்கொள்ளேன் உன் தேசத்திற்கு...!!!)
பெக்கல் போர்ட்க்கு நீ சொன்ன மாதிரியே நான் போனேன்! ஆனா எனக்கு ஒண்ணும் அந்தளவுக்கு ஃபீலிங்ஸ் தெரியலையேன்னு சொல்ற ஆளா நீங்க?
அப்ப உங்களுக்கு தேவாரத்திருத்தலங்கள் பத்தி பதிவு போடப்போறேன் அதை வந்து படிங்க ஒ.கேவா!
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யன், மாமியார் வீடு, ஜாலி
காயத்ரி அக்கா’வின் கவிதைச்சரத்திற்கு – போட்டியாக..!
இந்த வார நட்சத்திரமான காயத்ரி அக்கா ஒரே கவிதைகள் போட்டு, கவிதைகளமாக்கி கொண்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க!
நம்ம மட்டும் சும்மாவா! தமிழ் கவிதைகளவிடுங்க, தமிழ் கவிதைகளோடா இன்னும் சூப்பரான கவிதைகளெல்லாம் மலையாளத்துல இருக்கறது நெறையா பேருக்கு தெரியாது அதனால மலையாள மனேரமாவில வந்த இந்த கவிதைய பாருங்க!
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மாமியார் வீடு, மொக்கை





