கடகம்

டிஸ்கி:- பதிவெழுத வந்த கதையை பத்தி சொல்லுங்கன்னு சிநேகிதி கூப்பிட்டாங்க அப்புறமா தம்பியண்ணே கோபி கூப்பிட்டாங்க ஆனாலும் நேரம் காலம் ரொம்ப மோசமா போயிட்ட காரணத்தினால[இப்பவெல்லாம் ஆபிஸ்ல வேலை எல்லாம் செய்ய சொல்லி ரொம்ப கொடுமை பண்றாங்க!] ரொம்ப லேட்டாத்தான் எதோ எழுதிட்டேன்!

************************************************************************



நிறைய பேருக்கு ரொம்ப நாளாவே ஆசை இவனெல்லாம் எப்படி எழுத வந்தான்னு தெரிஞ்சுக்கிடணும்னு சரி நாமளே சொல்லாட்டி ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் வரவழைக்கிற இன்னும் பல தொடர்களை போட்டு தாக்கிடப்போறாங்களோன்னு முந்திக்கிட்டாச்சு!

2003 சகோதரர் மூலம் அறிமுகமான தமிழ் இணைய உலகம் நெட் செண்டர்களில் மாதத்துக்கு ஒரு முறை செல்லும்போது பார்க்கும் விசயமாகத்தான் இருந்துச்சு பிறகு சும்மா வெளையாட்டுக்கு ஒரு ப்ளாக் ரிஜிஸ்டர் பண்ணி வைச்சதோட சரி! அதுக்கு பிறகு வெளிநாட்டு பயணம் அப்புறம் வெட்டியா இருந்த காலகட்டத்திலதான் மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்!

டிராக் பேக் செஞ்சு எப்படி நுழைஞ்சோம்ன்னு சொல்றதுக்கு பதில் நுழைஞ்ச பிறகு மனசில இருந்த விசயங்களை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு போறேனுங்க!
எப்படியோ ஒரு வழியா பேரெல்லாம் செலக்ட்டி ப்ளாக்கு ஒபன் செஞ்சு அதுக்கு தோரணமெல்லாம் கட்டி தொங்கவிட்டப்பிறகுதான் ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை!

டெய்லி பேப்பர் படிக்கிறதை வைச்சு எதாச்சும் எழுதலாம்ன்னு ஒரு ஐடியா வர்ற அது கொஞ்ச நாள் ஓடிக்கிட்டிருந்துச்சு பிறகு என்ன எழுதலாம் எழுதலாம்ன்னு நினைப்பே ரொம்ப டெரர் காமிச்சுக்கிட்டிருந்துச்சு சரி கொஞ்ச நாள் படிப்போம்ன்னு கம்முன்னு படிக்க ஆரம்பிச்சா,அட இதெல்லாம் இவுங்க எழுதும்போது நாம எழுதறதுல தப்பே இல்லன்னு நினைப்பு வந்து குந்திக்கிச்சு - அதுக்குத்தான் எழுதறதுக்கு மேட்டர் இல்லைன்னா மத்தவங்களை படிக்க ஆரம்பிங்க உங்களுக்குள்ளயே ஒரு நம்பிக்கை ஸ்ட்ராங்காயிடும்ன்னு எல்லாரும் அட்வைஸ் சொல்றாங்க - பள்ளிகூடத்து நினைப்பு ஊர் நினைப்பு அப்படின்னு ஏகப்பட்ட கொசுவர்த்தி சுத்துறது ரொம்ப ஜாலியா இருக்கும்!

சாதாரணமாவே யாரையாச்சும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்றதை ஒரு மாசம் ஃபாலோ பண்ணுனீங்கன்னா ஏகப்பட்ட காமெடி பதிவுகளை எழுதிடலாம் அந்தளவுக்கு நல்ல கான்பிடெண்ட் கொடுப்பாங்க நம்ம ஆளுங்க! ஒவ்வொரு நாளும் சொல்ற ஒவ்வொரு வாசகமும் இன்னொரு நாள் அலேக்கா பல்டி அடிச்சு ஆடுவாங்க! அதை பாக்குற நமக்கு பீறிட்டு வர்ற கோபத்தை அப்படியே கொண்டாந்து ப்ளாக்ல கொட்டலாம்.அப்படித்தான் நானும் செய்ய நினைச்சேன் ஆனா செய்யல!

கலவர பூமியில வேடிக்கை மட்டும் பார்ப்போம்ன்னு ஒன்லி வாட்சிங்க்! - மாசத்துக்கு ஒரு நாளாச்சும் போஸ்ட் கண்டிப்பா வெறித்தனமா வரும் அதை படிச்சு நம்ம ஆசையை தணிச்சுக்கிடலாம்! [அவுட் ஆப் சிலபஸ் போயிட்டேன் சாரி]

ப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன்! எதாச்சும் எழுதி என்னாடா இப்படி கேவலமா இருக்கேன்னு சொன்னா அட இது என்னோட டைரின்னு சொல்லி எஸ்ஸாகிடலாம்ன்னு ஒரு திட்டத்தோடதான்...!

ஆரம்ப கட்டத்தில பொழுது போகாத சூழலில் வேறு வழியே இல்லாத நிலையில் ப்ளாக் படிக்க துவங்கியதும் விடுமுறை நாட்களில் முழு இரவும் பதிவுகளை படித்து ஊர் ஞாபகங்களை மனசுக்குள் ரெப்ரஷ் செய்துகொண்டதும் தான் வழக்கமாய் அமைந்திருந்தது!

நாமும் எதேனும் கிறுக்க தொடங்கலாம் என்று ஆரம்பித்து எந்தவொரு எல்லைகோடும் வரைந்துகொள்ளாமல் நினைப்பதை எல்லாம் எழுதிட - தொடர்ந்துகொண்டிருக்கிறேன்! துறை சார்ந்த பதிவுகளினை எழுத வேண்டும் என்ற நெடு நாள் ஆசை இன்னமும் மனசுக்குள்ள போட்டு பூட்டி வைச்சிருக்கேன் என்னிக்க்கு வாய்ப்புக்கிடைக்கிறதோ தெரியாது அப்பொழுது இருக்கு அட்டாக்கு!

இந்த சில காலங்களில் பதிவுலகில் நான் பெற்ற நட்புக்கள் - ஹாய் சொல்வதிலிருந்து, ஏதேனும் இக்கட்டான சூழலில் தரும் அட்வைஸ்கள் வரை- என் மீதான அக்கறையினை நினைத்து மனம் மகிழ்ந்துபோகின்றேன்.நட்புகளின் எண்ணிக்கை கூடவும்,இருக்கும் நட்புக்கள் இனி வரும் காலங்களிலும் கூட வரவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!

34 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சுய புராணம் நல்லா இருந்துச்சு பாஸ்.

துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!//

amam boss

said...

//என்னிக்க்கு வாய்ப்புக்கிடைக்கிறதோ தெரியாது அப்பொழுது இருக்கு அட்டாக்கு!//

சீக்கிரமே கனவு நினைவாகி அட்டாக்க வாழ்த்துக்கள்!

//துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!//

ரைட்.

said...

//துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!//

சரிங்க்ணா.. :)

said...

இன்னும் நிறையா எழுதுங்க.... வாழ்த்துக்கள், விவரங்களுக்கு.

உங்களின் ஓட்டையும் போடலாமே?

பிரபாகர்.

said...

//துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில் இன்பமான தருணங்களை ரசித்துக் கொண்டே பயணிப்போம்.//

அற்புதமான வரிகள்,ஆயில்யன்.

பயணங்கள்முடிவதில்லை,பயணிப்போம்.

said...

ஐடியா மணியா நீங்க.. எக்கச்சக்க ஐடியா வச்சிருக்கீங்க ஆயில்யன்.. :)

said...

பாஸ் ரொம்ப பெரிய பெரிய கருத்தெல்லாம் சாதாரணமா சொல்றீங்க. பெரிய ஆளு தான் பாஸ் நீங்க.

கொசுவத்தி நல்லா இருந்தது பாஸ்

said...

நல்லாருக்கு பாஸ்...சுவாரசியமா இருக்கு..உங்க டச்சோட!!! /மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்!/
:)))

said...

/ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை!/

ஹிஹி...யோசனைக்கே யோசனையா...:-)

said...

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"

go on

said...

ஆயிரம் சொல்லிக்கறாங்க பாஸ்...உங்கள பத்திதெரியாம....
விடுங்க பாஸ்...நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்...எம்புட்டு அடிவாங்கினாலும் ஒரு பதிவுன்னு போட்டா ஓடோடி வந்திரமாட்டோம்...
நீங்க கலக்குங்க பாஸ்.

துறை சார்ந்த பதிவு...எப்போ பாஸு..?

said...

//துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!//

சொல்லப்போனா இப்படி இருக்க்ற லைஃப் தான் சுவாரஸ்யமா இருக்கு.

அழகா எழுதியிருக்கீங்க பாஸ்.

said...

/ஏகப்பட்ட கொசுவர்த்தி சுத்துறது ரொம்ப ஜாலியா இருக்கும்!/

யெஸ்...யெஸ்...இட்லிபொடி பதிவு பாஸ்!! :-)

said...

/ஏதேனும் இக்கட்டான சூழலில் தரும் அட்வைஸ்கள் வரை- என் மீதான அக்கறையினை நினைத்து மனம் மகிழ்ந்துபோகின்றேன்./

ஆமா..பாஸ்..நீங்க அடிக்கடி சென்னை வரணும்...எங்களுக்கு ட்ரீட் கொடுக்கணும்..:-)) g3...சீக்கிரம் வரவும்!! :)))

said...

நல்லா இருக்கீங்களா அண்ணா?? :))))

said...

//சந்தனமுல்லை said...
/ஏதேனும் இக்கட்டான சூழலில் தரும் அட்வைஸ்கள் வரை- என் மீதான அக்கறையினை நினைத்து மனம் மகிழ்ந்துபோகின்றேன்./

ஆமா..பாஸ்..நீங்க அடிக்கடி சென்னை வரணும்...எங்களுக்கு ட்ரீட் கொடுக்கணும்..:-)) g3...சீக்கிரம் வரவும்!! :)))//

எனக்கு... :(((((((((

said...

//நிறைய பேருக்கு ரொம்ப நாளாவே ஆசை இவனெல்லாம் எப்படி எழுத வந்தான்னு தெரிஞ்சுக்கிடணும்னு//

மத்தவங்க மனச படிக்கறதுல நீங்க கில்லாடிண்ணே... ;))))

said...

//சரி நாமளே சொல்லாட்டி ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் வரவழைக்கிற இன்னும் பல தொடர்களை போட்டு தாக்கிடப்போறாங்களோன்னு முந்திக்கிட்டாச்சு!//

அந்த பயம் இருக்கட்டும்.. ;))

said...

//மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்!//

ஹி ஹி ஹி :)))))))

said...

//ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை!//

நிசமாத்தான் சொல்றீங்களாஆஆஆஆ?? இப்படியெல்லாம் யோசிச்சீங்களாஆஆஆ?? ம்ம்ம் அப்பறம் என்ன ஆச்சு??? ;)))))))

said...

//டெய்லி பேப்பர் படிக்கிறதை வைச்சு எதாச்சும் எழுதலாம்ன்னு ஒரு ஐடியா வர்ற அது கொஞ்ச நாள் ஓடிக்கிட்டிருந்துச்சு//

இப்பவும் அப்படித்தான்னு பேசிக்கிறாங்க அண்ணா... நான் சொல்லலப்பா... ;)))))))))

said...

//அட இதெல்லாம் இவுங்க எழுதும்போது நாம எழுதறதுல தப்பே இல்லன்னு நினைப்பு வந்து குந்திக்கிச்சு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))))))

said...

//சாதாரணமாவே யாரையாச்சும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்றதை ஒரு மாசம் ஃபாலோ பண்ணுனீங்கன்னா ஏகப்பட்ட காமெடி பதிவுகளை எழுதிடலாம் அந்தளவுக்கு நல்ல கான்பிடெண்ட் கொடுப்பாங்க நம்ம ஆளுங்க!//

ரசிச்சேன்.. :))))

said...

ம்ம்ம் கமெண்டெல்லாம் ரிலீஸ் பண்ணாதான் அடுத்தது போட முடியும் ஆமா... ரிலீஸ் பண்ணுங்க அப்பறம் வரேன் அண்ணா.. தனியா இருக்க பயமா இருக்கு... ;)))))))

said...

பாஸ்

உங்க பதிவின் கடைசி வரியை பார்த்ததும் "கருத்து கந்தசாமி"ன்னு ஒரு பட்டம் கொடுக்க இருக்கேன் ஒகேவா

said...

""ப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன்! எதாச்சும் எழுதி என்னாடா இப்படி கேவலமா இருக்கேன்னு சொன்னா அட இது என்னோட டைரின்னு சொல்லி எஸ்ஸாகிடலாம்ன்னு ஒரு திட்டத்தோடதான்...!""

பாஸ் இந்த திட்டத்தை நானும் பாலோ பன்னுகிறேன் பாஸ்

said...

இன்பமான தருணங்கள் அதிகரித்தே இருக்கின்றன வலையுலகில் வந்த பின்

இதோ இப்பொழுது கூட தங்கள் பதிவினை படித்து இதுவும் ஒரு இன்பமான தருணமாக உணர்கிறேன்

Anonymous said...

//ப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன்! //

பாஸ், நாம எல்லாரும் அப்படித்தான் பாஸ்.

கடைச்சீல டெரர்ரா எழுதீட்டீங்க பாஸ்

said...

/துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!/

:) Good one

said...

பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணே ;)

பழைய நினைவுகள் சுவைபட சொல்லியிருக்கிங்க ;)

said...

வாழ்த்துகள் அண்ணே.!

Anonymous said...

என்னோட பின்னூட்டம் எங்க பாஸ்

said...

ஆயில்யன் உங்க மனசில என்னமோ ஒண்ணு பாதில தொங்குற மாதிரி அவதிப்படுது.சொல்லாம விட்டிட்டீங்க.

said...

அட...இவ்வ்ளோ சீக்கிரமா போட்டுட்டீங்க!