பயணத்தில் நான்...


நீண்ட நெடிய சாலை!

பாதை தெரிகிறது!

பயமும் தெரிகிறது!

தனி ஒருவனாக கடக்கப்போவதை நினைத்து!

யாருமில்லா இருபக்கங்களில்

யாரை நான் கூப்பிடுவேன்!

யாரை நான் கும்பிடுவேன்!

எங்கள் ஊர் அரசியல்வாதிகள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

யாருமே இல்லாத இடத்தில் போட்ட கும்பிடுக்காக

நான் அவர்களைப்பார்த்து எத்தனை முறை சிரித்திருப்பேன்..!

யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;

தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் வெல்வேன் என்று..!

எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,

இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!

பாதையே மலர்களால் வேண்டாம்!

பாதையில் வரும் மரங்களாவது,

என் மீது மலர்களை உதிருமா..?



(ஜீவ்ஸ் அண்ணாச்சி தானாகவே முன்வந்து மெருகேற்றி தந்த படம் - இணைய நட்புறவு இணைந்த நேரமும் கூட!)

டிஸ்கி:-கடந்த வருடத்தில் இதே நாளின் நட்சத்திர வாரத்து பதிவு மீள் பதிவாய்...!

55 பேர் கமெண்டிட்டாங்க:

said...

படமும் அருமை. அதற்காகவே எழுதப் பட்டாற் போன்ற கவிதையும் அருமை.

//யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!//

தெரியட்டும், பின் தெளிவு வந்ததல்லவா?

//பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,//

முதலில்தானே, பின் பயம் விலகியதல்லவா?

//ஒன்று மட்டும் உறுதியாகிறது.
போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;//

இந்த உறுதி போதுமே.

//தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,
நானும் செல்வேன் வெல்வேன் என்று..!//

நானும் சொல்கிறேன், செல்வீர்கள் வெல்வீர்கள். வாழ்த்துக்கள் ஆயில்யன்.

said...

ஹை நானும் வந்துட்டேன்..!! :))))))))நல்லாருக்கு அண்ணா கவிதை, அப்பறம் அந்த படம்..!! :)) இது என்ன உங்க ஊரா??? ;)))

said...

படமும் நல்லா இருக்கு, கவிதையும் நல்லா இருக்கு... :)

said...

//பாதையே மலர்களால் வேண்டாம்!


பாதையில் வரும் மரங்களாவது,


என் மீது மலர்களை உதிருமா..?//

repeatu ;-)

said...

உன் பாதை வேறு
என் பாதை வேறு
ஒவ்வொருவருக்கும்
ஒரு பாதை உள்ளது
பயனம் உள்ளது.
ஏதோ ஒரு மர நிழலில்
இளைப்பாரும் போது
சந்திக்கலாம்,
அப்போது முட்களை அல்ல
மலர்களை பகிர்ந்து கொள்வோம்!

நல்ல கவிதை அண்ணே, உங்கள பார்த்து எனக்கு தோன்றிய சில வரிகள்;
நல்லாயிருக்கா?

said...

பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?

Nalla varigal!!! Neengal ninaithavai yaavum niraivera en vaalthukal.. nalla valaipadhivu!!!

said...

சாலை படம் மிகவும் நன்றாக இருக்கிறது ஆயில்யன்.

//தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,
நானும் செல்வேன் வெல்வேன் என்று..!//

நன்று.

'காரிருள் நேரம்
சாலையோ தூரம்
கண்ணீர் பாரம்
நெஞ்சிலே ஓஓஓஓஒ'

என்று ஒரு பழைய பாடல்


காரணமே இல்லாமல் நினைவுக்கு வந்தது:)

said...

/*ஒன்று மட்டும் உறுதியாகிறது.
போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;
தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,*/
...
/*பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?*/

படமும் வரிகளும் நன்றாக உள்ளது. நிச்சயம் மலர்கள் பயணத்திற்கு புத்துணர்ச்சியூட்டும்..

said...

யாருமில்லா இருபக்கங்களில்

யாரை நான் கூப்பிடுவேன்

ENNA KUPTUNGA FRIENDS NAAN VAREN OK

said...

பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?

KAVITHAI VARIKAL ARUMAI FRIEND

said...

Wow really nice. Kavithai nalla irukku.Nice lines.
The modified pic is too good!
கவிதையும் படமும் நல்லா இருக்கு...:))))

said...

அண்ணா உங்களுக்கான பாதை ரொம்ப ரொம்ப பிரகாசமாய் இருக்கு மீள் பதிவின் படம் போலவே....:)

said...

என் மீது மலர்களை உதிருமா..?

உதிர்க்கும்.

இல்லையெனில் நான் பூமழை தூவுகிறேன் தம்பியண்ணா.


பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கிறது.

எழில் கொஞ்சிடும் (?!!) அன்பு அண்ணனின்
உதட்டில் புன்னகை தெரிகிறது
வெற்றி புன்னகை தெரிகிறது.

said...

அண்ணே! இந்த கவிதையும் படமும் இதுக்கு முன்னாடியே பார்த்து இருக்கேனே? ...

said...

///டிஸ்கி:-கடந்த வருடத்தில் இதே நாளின் நட்சத்திர வாரத்து பதிவு மீள் பதிவாய்...!///
ஐய்! ஆமா... பழைய பதிவு தான்... ம் வ்ருஷம் ஒன்னு கடந்து போட்டு அண்ணே..ம்ம்ம் நேத்து மாதிரி இருக்கு. :)

said...

///எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,
இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!///

அண்ணே! கவலைப்படாதீங்க... சீக்கிரமே எதிரில் இல்லாம அந்த ஒற்றையடிப் பாதையில் கூடவே வருவாங்க...... ;)

said...

நல்லாயிருக்கு அண்ணாச்சி ;)

said...

ஆயில்யன்,
நல்ல மனங்களின் பயணத்தில் பயமே வேண்டாம்.
தனிமை உறுத்தினால் காற்றாவது துணைக்கு வரும்.
காற்றுவாக்கில் நட்புகளின் செய்திகளும் வரும்.
உங்கள் கவிதையும் பாடலும்
எனக்கு ஏதோ தெளிவைக் கொடுத்தன.

படத்தின் தென்னைகளும் வயலும் பசுமையாக இனிமையாக இருக்கின்றன.
பயணத்தில் எப்பவும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.

@மது, அது துலாபாரம் பாட்டா??

said...

படமும் கவிதையும் அருமை

said...

படம் அருமை...என்ன ஒரு transformation!!!
கவிதையும் சூப்பர் :))

said...

ஆழ்ந்த அர்த்தங்கள்! ரொம்ப நல்லா இருக்கு! சூப்பர் அப்பூ!

said...

கலக்கறீங்க போங்க.. :))

said...

// ராமலக்ஷ்மி said...
படமும் அருமை. அதற்காகவே எழுதப் பட்டாற் போன்ற கவிதையும் அருமை.

நன்றி அக்கா!

//யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!//

//தெரியட்டும், பின் தெளிவு வந்ததல்லவா?//

வந்த மாதிரிதான் ஒரு நினைப்பு! :)

//பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,//

முதலில்தானே, பின் பயம் விலகியதல்லவா?//

அது வெளிறி விலகிப்போச்சு!

//ஒன்று மட்டும் உறுதியாகிறது.
போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;//

இந்த உறுதி போதுமே.//

உண்மைதான் உறுதி ஒன்றே போதும் எதையும் ஜெயிக்க!

//தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,
நானும் செல்வேன் வெல்வேன் என்று..!//

நானும் சொல்கிறேன், செல்வீர்கள் வெல்வீர்கள். வாழ்த்துக்கள் ஆயில்யன்.//

அக்காவின் ஆசிகளுடன் தொடர்கிறேன்....!

said...

//ஸ்ரீமதி said...
ஹை நானும் வந்துட்டேன்..!! :))))))))நல்லாருக்கு அண்ணா கவிதை, அப்பறம் அந்த படம்..!! :)) இது என்ன உங்க ஊரா??? ;)))
//

எங்க ஊருக்கும் பக்கத்துல!
நல்லாருக்கா?

said...

/ நாணல் said...
படமும் நல்லா இருக்கு, கவிதையும் நல்லா இருக்கு... :)
//
நன்றி! நன்றி!!

said...

//கானா பிரபா said...
//பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?//

repeatu ;-)
//

தாங்க்ஸ் தல :)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
உன் பாதை வேறு
என் பாதை வேறு
ஒவ்வொருவருக்கும்
ஒரு பாதை உள்ளது
பயனம் உள்ளது.
ஏதோ ஒரு மர நிழலில்
இளைப்பாரும் போது
சந்திக்கலாம்,
அப்போது முட்களை அல்ல
மலர்களை பகிர்ந்து கொள்வோம்!

நல்ல கவிதை அண்ணே, உங்கள பார்த்து எனக்கு தோன்றிய சில வரிகள்;
நல்லாயிருக்கா?
//

வெரிகுட்!வெரிகுட்!! கண்டினியூ பண்ணுப்பா!

said...

//Karthik said...
பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?

Nalla varigal!!! Neengal ninaithavai yaavum niraivera en vaalthukal.. nalla valaipadhivu!!!
//

நன்றி கார்த்திக்!

said...

// மதுமிதா said...
சாலை படம் மிகவும் நன்றாக இருக்கிறது ஆயில்யன்.
//தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,
நானும் செல்வேன் வெல்வேன் என்று..!//
நன்று.
'காரிருள் நேரம்
சாலையோ தூரம்
கண்ணீர் பாரம்
நெஞ்சிலே ஓஓஓஓஒ'
என்று ஒரு பழைய பாடல்
காரணமே இல்லாமல் நினைவுக்கு வந்தது:)
//

நன்றி அக்கா!

said...

//அமுதா said...
/*ஒன்று மட்டும் உறுதியாகிறது.
போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;
தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,*/
...
/*பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?*/

படமும் வரிகளும் நன்றாக உள்ளது. நிச்சயம் மலர்கள் பயணத்திற்கு புத்துணர்ச்சியூட்டும்..
//

நன்றி அமுதாக்கா!

said...

//gayathri said...
யாருமில்லா இருபக்கங்களில்
யாரை நான் கூப்பிடுவேன்
ENNA KUPTUNGA FRIENDS NAAN VAREN OK
//

ம்ஹுக்கும்! வர்ரதே இந்த பிளாக்கு பக்கம் வாரத்துக்கு ஒருதடவை!

said...

//gayathri said...
பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?

KAVITHAI VARIKAL ARUMAI FRIEND
///

டாங்க்ஸ் ப்ரெண்ட்!

said...

//Mathu said...
Wow really nice. Kavithai nalla irukku.Nice lines.
The modified pic is too good!
கவிதையும் படமும் நல்லா இருக்கு...:))))
//

நன்றி மது! போஸ்ட் புரொடெக்‌ஷன் அண்ணாச்சி ஜீவ்ஸ்க்கும் நன்றி!

said...

//நிஜமா நல்லவன் said...
அண்ணா உங்களுக்கான பாதை ரொம்ப ரொம்ப பிரகாசமாய் இருக்கு மீள் பதிவின் படம் போலவே....:)
//
தம்பி சொன்னா டக்கராத்தான் இருக்கும் பார்ப்போம்!

said...

//AMIRDHAVARSHINI AMMA said...
என் மீது மலர்களை உதிருமா..?
உதிர்க்கும்.
இல்லையெனில் நான் பூமழை தூவுகிறேன் தம்பியண்ணா.
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கிறது.
எழில் கொஞ்சிடும் (?!!) அன்பு அண்ணனின்
உதட்டில் புன்னகை தெரிகிறது
வெற்றி புன்னகை தெரிகிறது.
//

எனக்கு ஒரே அழுகை அழுகையா வருது! - பூமழை பாட்டுக்கு இல்ல!

எழில் கொஞ்சிடும்ல ஏன் ? ன்னு நினைச்சிபார்க்கையில :(((

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே! இந்த கவிதையும் படமும் இதுக்கு முன்னாடியே பார்த்து இருக்கேனே? ...

பார்த்திருக்கலாம்!

said...

//தமிழ் பிரியன் said...
///டிஸ்கி:-கடந்த வருடத்தில் இதே நாளின் நட்சத்திர வாரத்து பதிவு மீள் பதிவாய்...!///
ஐய்! ஆமா... பழைய பதிவு தான்... ம் வ்ருஷம் ஒன்னு கடந்து போட்டு அண்ணே..ம்ம்ம் நேத்து மாதிரி இருக்கு. :)
//

நன்னி :)))))

said...

//தமிழ் பிரியன் said...
///எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,
இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!///
அண்ணே! கவலைப்படாதீங்க... சீக்கிரமே எதிரில் இல்லாம அந்த ஒற்றையடிப் பாதையில் கூடவே வருவாங்க...... ;)
//
ஆருலே அது கூடவே வரப்போறது!

தம்பி இந்த மாதிரி பயணத்தில சிங்கிளா போனாதான் சீக்கிரம் போய் சேரமுடியும்!

said...

//கோபிநாத் said...
நல்லாயிருக்கு அண்ணாச்சி ;)
//

நன்னி தம்பி!

நல்லா இருக்கீயளா தம்பி!

said...

//வல்லிசிம்ஹன் said...
ஆயில்யன்,
நல்ல மனங்களின் பயணத்தில் பயமே வேண்டாம்.
தனிமை உறுத்தினால் காற்றாவது துணைக்கு வரும்.
காற்றுவாக்கில் நட்புகளின் செய்திகளும் வரும்.
உங்கள் கவிதையும் பாடலும்
எனக்கு ஏதோ தெளிவைக் கொடுத்தன.

படத்தின் தென்னைகளும் வயலும் பசுமையாக இனிமையாக இருக்கின்றன.
பயணத்தில் எப்பவும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.

@மது, அது துலாபாரம் பாட்டா??
//

காற்றாவது துணைக்கு வரும்
காற்றுவாக்கில் நட்புகளின் செய்திகளும் வரும்
அருமையாய் சொன்னீங்க வல்லியம்மா!

said...

//திகழ்மிளிர் said...
படமும் கவிதையும் அருமை
//

நன்றி திகழ்மிளிர் (பெயரிலே எனக்கு ஒரு ஈர்ப்பு எப்படி அருமையா செலக்ட் பண்ணியிருக்கீங்க!)

said...

//Divyapriya said...
படம் அருமை...என்ன ஒரு transformation!!!
கவிதையும் சூப்பர் :))
//

நன்றி திவ்ஸ்!

said...

//Sangeeth said...
ஆழ்ந்த அர்த்தங்கள்! ரொம்ப நல்லா இருக்கு! சூப்பர் அப்பூ!
//

தங்கச்சி நொம்ப டேங்க்ஸ்ம்மா! (படிக்கறதோட மட்டும் நிப்பாடிக்ககூடாது நீங்களும் தமிழ்ல எழுதணும் ஆமாம்!)

said...

/Saravana Kumar MSK said...
கலக்கறீங்க போங்க.. :))
//

தாங்க்ஸ் சரவணா!

said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
ஹை நானும் வந்துட்டேன்..!! :))))))))நல்லாருக்கு அண்ணா கவிதை, அப்பறம் அந்த படம்..!! :)) இது என்ன உங்க ஊரா??? ;)))
//

எங்க ஊருக்கும் பக்கத்துல!
நல்லாருக்கா?//

ஓஓ ரொம்ப நல்லாருக்கு..!! :))))))

said...

இந்த படத்தை பார்த்தா, நம்ப ஊரை பார்த்த திருப்தி இருக்கு

said...

//அண்ணே! கவலைப்படாதீங்க... சீக்கிரமே எதிரில் இல்லாம அந்த ஒற்றையடிப் பாதையில் கூடவே வருவாங்க...... ;)
//

Repeatye... padathula varra paathai mattum puthusaa illa. innum koodiya viraivil puthiya paathai seetha maathiri nalla Anni kittavum vaazththukkal....

said...

//இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!
பாதையே மலர்களால் வேண்டாம்!
பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?//

கண்டிப்பாக அண்ணா! :-) எதுக்கு இவ்ளோ சந்தேகம்?? இது உங்க ஊரா?
ரொம்ப நல்லா இருக்கே..

said...

காலம் எம்புட்டு வேகமா போகுதில்ல :)

இப்பத்தான் பேச ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. அப்போ நீர் காட்டுன பந்தா எல்லாம் நினைவுக்கு வருதுவோய் ;)

said...

ஆயில்யன் said...
//gayathri said...
யாருமில்லா இருபக்கங்களில்
யாரை நான் கூப்பிடுவேன்
ENNA KUPTUNGA FRIENDS NAAN VAREN OK
//

ம்ஹுக்கும்! வர்ரதே இந்த பிளாக்கு பக்கம் வாரத்துக்கு ஒருதடவை

neega daily kavithai eluthunga naanum denamum vanthu unga blog pathuthu poren ok friend

said...

அன்பின் ஆயில்ஸ்

கவிதை அருமை

படம் அருமை - ( ஜீவ்ஸிற்கும் பாராட்டுகள் )

தனியே செல்லப் பயப்பட வேண்டியதே இல்லை - எப்பொழுதும் நமக்குப் பக்கத்தில் ஒருவன் இருக்கின்றான். அவன் தான் இறைவன். அவனின் கருணை இருக்கும் வரை நாம் கைவிடப்படமாட்டோம். வல்லிம்மா கூறிய மாதிரி கூட இருக்கும் காற்றே போதும்.

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்

said...

நல்ல கவிதை ஆயில்யன்.
நானும் ஆயில்யன் தானாம் யாரும் என்கிட்ட ராசியா இல்ல?

said...

அண்ணே அப்பறம் ஏன் கவிதையே எழுதாம விட்டுட்டிங்க...

said...

எனக்கென்னமோ முதல் படம்தான் பிடித்திருக்கிறது...

said...

தமிழ் பிரியன் said...
///டிஸ்கி:-கடந்த வருடத்தில் இதே நாளின் நட்சத்திர வாரத்து பதிவு மீள் பதிவாய்...!///
ஐய்! ஆமா... பழைய பதிவு தான்... ம் வ்ருஷம் ஒன்னு கடந்து போட்டு அண்ணே..ம்ம்ம் நேத்து மாதிரி இருக்கு. :)
\\

அப்ப நான் புதுசு ஆனாலும்

ரிப்பீட்டு...:)