..::மைபிரண்டு::.. - இணைய நட்பின் அதிசயம்!
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்!
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்!
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்!
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்!
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
இத்தனை அதிசயங்களுமே அசந்து போகும் அதிசய நட்பு - ..::மைபிரண்டு::..
சகோதரியின் பிறந்த நாளில்,வரும்,பெறும் வெற்றிகள் பெரும் வெற்றிகளாக இருக்கும் என்று வாழ்த்தி மகிழ்கிறோம்!
# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க
Labels: .:: மை ஃபிரண்ட் ::.
சித்து - ஒவ்வொரு பற்களிலும் சிரிக்கும் .:: மை ஃபிரண்ட் ::. :-)
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
Hey ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
மணல் முழுதும் இன்று சர்க்கரையா?
கடல் முழுதும் இன்று குடிநீரா?
கரை முழுதும் உந்தன் சுவடுகளா
அலை முழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே........
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: .:: மை ஃபிரண்ட் ::.
வலையுலக சூப்பர் ஸ்டார் - .:: மை ஃபிரண்ட் ::.
சின்ன குட்டீஸ்கள்லேர்ந்து பெரிய பார்ட்டீகள் வரைக்கும் அம்புட்டு ஆளுங்களுக்கும் நம்ம .:: மை ஃபிரண்ட் ::. புடிச்சிருக்குன்னா அவுங்க தானே வலையுலக சூப்பர் ஸ்டாரு!
இன்னிக்கு நம்ம .:: மை ஃபிரண்ட் ::. பர்த்டே!
வாங்க கொண்டாடுவோம்!
# ஆயில்யன் 161 பேர் கமெண்டிட்டாங்க
Labels: .:: மை ஃபிரண்ட் ::.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.

இது சங்கீத திருநாளோ!
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..
கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..
கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..
செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..
உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..
பூவெல்லாம் இவை போல அழகில்லை..
பூங்காற்றில் இவை போல சுகமில்லை..
இதுபோல சொந்தங்கள் இனியில்லை..
எப்போதும் அன்புக்கு அழிவில்லை..
இவள்தானே நம் தேவதை..
நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..
சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;
கண்ணில் மின்னும் ஒரு காவியம்;
மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;
நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..
என்றும் எங்கும் இவள் ஞாபகம்..
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..
இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..
இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..
எப்போதும் தாலாட்டுவேன்..
சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..
கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..
இது சங்கீத திருநாளே!
எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!
புடிச்சு போட்ட பாட்டு இங்கே இருக்கு பார்க்கலாம் :-)
# ஆயில்யன் 23 பேர் கமெண்டிட்டாங்க
Labels: .:: மை ஃபிரண்ட் ::.

