கடமையை செய்! பலனை எதிர்பார்! - ரஜினி





இந்தச் சந்திப்பின் நோக்கம்..?

நீண்ட காலமாக நீங்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள்; அதே போல நானும் உங்களைச் சந்திக்க ஆசைப்பட் டேன். இதுதான் நோக்கம். ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்; அதற்கு நான் பதில் அளிக்கிறேன்' என்றார்
அதுதான் இப்போது நடக்கிறது

முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள்; அதன்பிறகு அருணாசலேஸ்வரர்; பிறகு பாபாஜி என்கிறீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வை இல்லையா?

நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என பல படிப்புகள் உள்ளன. அவை நமது அறிவை விருத்தி செய்கின்றன. அதுபோலத்தான் தேடல் நிறைந்த உள் ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கி றது. தேடல் உள்ளவர்கள் பார்வையில் இது ஒன்றும் தவறு கிடையாது

உங்களைக் குழப்பவாதி என எழுதுவதையும் பேசுவதையும் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம்கொடுக்கிறீர்கள்?

பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்டால் எப்படி?...

சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித் தான் இருக்கிறது. இது செய்தால் இது நடக்கும் என யூகித்துச் சொல்வதில்லை!

நான் நினைப்பது சரி எனும்போது பேசிவிடுகிறேன். அதை வேறு கோணத்தில் பார்ப்பவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. சில செய்திகளைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில செய்திகள் சிந்திக்க வைக்கும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். என்னுடைய சுயநலத்துக்காக நான் யாரையும் குழப்பியதில்லை. மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதுதான்

ஒகேனக்கல் விவகாரத்தில் வருத்தம்; மன்னிப்பு? எது உண்மை?

நான் முன்னால் போக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் பின்னாலேயே போக வேண்டும் என்கிறீர்கள். விஷயம் முடிந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள். அதிலேயே இருந்தால் எப்படி..? ஒகேனக்கல் பிரச்னை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகத்தைப் பொருத் தவரை எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு முதலில் தாக்குலுக்கு உள்ளாவது தியேட்டர்கள் தான். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த மேடையில் அமர்ந்தேன். பலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். நானும் மனிதன்தானே!... பேசிவிட்டேன். ஒரு பிரச்னை ஆரம்பித்தால் உடனே முடியவேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் வருத்தம் தெரிவித்தேன்!

நீண்ட காலமாக மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களைப் பற்றி..?

"ரஜினி ரசிகர்கள்' என்பவர்களைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது
நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்

ரசிகர்களுக்கென ஓர் அங்கீகாரம் கிடைக்குமா?

ரஜினி ரசிகர் என்றால் சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்படி நிச்சயம் செய்வேன்
எதிர்காலத் திட்டம்; அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விகளுக்கு சிறிது மெüனம் காத்து ரஜினிகாந்த் பேசியதாவது:

மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான்..முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்; அடுத்து நான்... அடுத்ததுதான் அரசியல். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தை களுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையைச் செய்து வருகி றேன். அதுபோல நீங்களும் முதலில் உங்கள் கட மையைச் சரியாகச் செய்துவிடுங்கள் அரசியலைப் பொருத்தவரை திறமை, புத்திசா லித்தனம், உழைப்பு இருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அதற்கேற்ற சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் அமையவேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கியம். 1996-ம் ஆண்டு இருந்த நிலை வேறு. அன்று பதவிக்குரிய சூழ்நிலை இருந்தது.

நமக்கு ஒரு விஷயத்தில் திறமையும் அனுபவமும் இருக்கவேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தில் இறங்கக்கூடாது. என் சிறு வயதில் பணக் கஷ் டத்தில் இருந்தபோதுகூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 ஆண்டுகள் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். அதன்பிறகுதான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேன்.

அரசியலுக்கு வருமாறு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. பலவந்தமாக திருமணம் செய்து வைத்தால் அந்த வாழ்க்கை இனிமையாகவா இருக்கும்? இரண்டு தரப்பிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். ஒரு தரப்பில் மட்டும் வற்புறுத்தல் இருக்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை எல்லாமே ஆண்டவன்தான். அங்கிருந்து உத்தரவு வந்தால் நாளையே பல விஷயங்கள் நடக்கலாம்

ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. தற்போது பல இடங்களில் நிலைமை சரியில்லை. இங்கு மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் நிலைமை சரியில்லை. நாட்டில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வாருங்கள்.

22 பேர் கமெண்டிட்டாங்க:

said...

படம் பட்டையக் கெளப்புது!

said...

\\கப்பி | Kappi said...
படம் பட்டையக் கெளப்புது!\\

ரீப்பிட்டே ;))

said...

எதிர் முகாம் ஒரே சோகமா இருப்பதா கேள்வி :-)))

said...

கிரி, எதிர் முகாம் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்?

கமல் என்றால், அவரது ரசிகர்கள் ரஜினி படம் ஓடினால் பொறாமைப்படுவார்கள் என்று சொன்னாலாவது பரவாயில்லை. அரசியலுக்கு வருவதற்க்கு ஏன் பொறாமை?

உண்மையில் பல கமல் ரசிகர்கள் இப்போது போட்டி/பொறாமை யாய் நினைப்பது சுப்ரமணியபுரம் போன்ற படங்களையும், வாரணம் ஆயிரம் சூரியாவையும் தான். நம்மாளு ஏன் இப்படி படம் எடுக்கலை என்றுதான்.

அரசியல் முகாம் என்றால் விஜயகாந்தின் ஓட்டு பிரியும் என கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் என்று தான் நினைக்கிறேன்.
விஜயகாந்த் வேண்டுமானால் பயப்படலாம்.

அல்லது தங்கள் தற்போதைய எதிரியான லயோலா புகழ் விஜய்யா?

அவரை எதிரி என்று சொன்னால் நீங்கள் தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

இனிமேல் யாரை என்று தெளிவாக குறிப்பிடவும்

said...

//கிரி, எதிர் முகாம் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்?//

கமல் ரசிகர்கள் இல்லைங்க.. (அதெல்லாம் பழைய கதை) ரஜினிக்கு ஏதாவது சிக்கல் வந்தா ரொம்ப சந்தோசப்பட்டு கொண்டு இருப்பாங்களே அவங்க.

//தங்கள் தற்போதைய எதிரியான லயோலா புகழ் விஜய்யா?//

தற்போதைய எதிரியா!!! அவ்வ்வ்வ்வ்வ்

said...

//ஒன்றுமட்டும் நிச்சயம். என்னுடைய சுயநலத்துக்காக நான் யாரையும் குழப்பியதில்லை. மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன்//

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை...

கெட்டுப்பொனவர்கள்
விட்டுக்கொடுப்பதில்லை....

ஆயிரமாயிரம் ஸ்டார் இருந்தாலும் எங்கள் இதய சூப்பர் ஸ்டார் நீங்க தான் தலைவரே....

said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு !

said...

//நீண்ட காலமாக மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களைப் பற்றி..?

"ரஜினி ரசிகர்கள்' என்பவர்களைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது
நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்//

நல்லவேளை.. உண்மையை சொல்லவில்லை.. :))

பாவம்யா ரஜினி ரசிகர்கள்.. இந்த சந்திப்புலையாவது எதையாச்சும் புரியற மாதிரி சொன்னாரா?

ஒவ்வொரு மாவட்டத் தலவரும் நேரடியா பேச வாய்ப்புக் கெடைக்காம் துண்டு சீட்ல கேள்விய எழுதி தந்திருக்காங்க.. அதைக் கூட அவர்களால் நேரடியா கேட்க முடியலை.. :((

எதோ கடவுளை தரிசித்தவர்கள் போல்.. விட்டால் மீண்டும் பார்க்க முடியாதவர் போல் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

எதைக் கேட்டாலும் டெபனட்லி டெபனல்லின்னு சொல்லிட்டிருந்தார்..

ரஜினி ரசிகனின் எதிர்பார்ப்பு என்ன? ஒரு அங்கீகாரம்.. விஜயகாந்த், சரத்குமார் எலலாம் அவர்கள் ரசிகர்களுக்கு அரசியல் வாய்ப்பு குடுக்கும் போது இவர்களுக்கு அந்த எதிர்பார்ப்பு இருப்பது தவறில்லை. ஆனால் வரேன்..வரலைன்னு சொல்லி தொலையலாம்ல.. பாவம் ஏன் தான் இப்டி கொழுப்பி விடறாரோ..

ரசிகர்கள் எங்கயும் போய்டவும் கூடாது. இவரும் தெளிவா முடிவெடுக்க மாட்டாராம்.

சந்திப்பின் ஹைலைட் : ஒரு மாவட்டத் தலைவர் கேள்வி
“ தலைவா.. நீங்க தொடந்து சினிமால நடிப்பிங்கள?”

தலைவனுக்கும் மாவட்டத் தலைமை ரசிகனுக்கும் உள்ள இடைவெளியை பாருங்க..
அழுகை அழுகையா வந்திச்சி எனக்கு.. :((

said...

//"கடமையை செய்! பலனை எதிர்பார்! - ரஜினி"//

போஸ்டர் ஒட்டி..கட் அவுட் வச்சி..பாலாபிஷேகம் பண்ணி.. நேத்து வந்த விஜய் ரசிகர்கள் கிட்ட கூட மல்லுக்கு நின்னு... பல முறை உங்க பேச்சை கேட்டு சென்னை வந்து சந்திக்க முடியாம போயி.. இப்படி எவ்வளவோ கடமைகள் செய்தாயிற்று..

அதற்கு தான் பலனை எதிர்பார்க்கிறார்கள்.

அனால் அந்த பலன் தான் என்ன?

பலனை எதிர்பார்க்கசொல்லிவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது ஏமாற்றுவேலை இல்லையா தலீவா? :(

said...

சொல்லவும் முடியல
சொல்லாம இருக்கவும் முடியல

நல்லாவும் இருக்கு
நல்லா இல்லாமலும் இருக்கு

சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித் தான் இருக்கிறது

சில நேரங்களில் இல்ல பல பலப்பல நேரங்களில்.

said...

ரஜினி : இன்னுமாயா நம்பிகிட்டிருக்கு நம்பளை இந்த ஊரு?

சத்யநாராயணா: அதானே!

said...

எந்திரன் படம் முடிஞ்சா மட்டும் தெளிவா பதில் வந்துடுமா!

அதுக்குள்ளே அடுத்த படத்துக்கான கதை டிஸ்கசன் வேணா ரெடி ஆகும்!

80 வயசுக்கு மேல அரசியலுக்கு வந்து(ஒரு வேளை எப்பவாவது வந்துடலாம்னு தெளிவா முடிவெடுத்தா அதாவது இவரு வரணும்னு ஆண்டவன் முடிவெடுத்தா)
என்ன பிரயோசனம்?

ஒரு சின்ன விஷயத்துக்கே முடிவெடுக்க இவ்வளவு காலம்னா இவரையெல்லாம் சி.எம் சீட்ல உக்கார வெச்சா நாடு உருப்படுமா?

said...

ஹை இங்க என்னா நடக்குது?? ;)))

said...

கலக்கல். எந்திரன ஓட வைக்க தேவையானத பண்ணிட்டாரு.!!
சூப்பர் ஸ்டாருன்னா சூப்பர் ஸ்டாரு தான்.

said...

என்னங்க தலைவர் இப்படி கடுப்பேத்தறாரு.
சட்டுபுட்டுன்னு அரசியலுக்கு வந்து விஜயகாந்த கீழ தள்ளிட்டு 3- வது இடத்த பிடிப்பாருன்னு பாத்தா ஜகா வாங்கிட்டே இருக்காரே..
முழுசா கத்துகிட்டு தான் வருவாராம் சொல்றாரு.
இவரு சொல்லுற கணக்கப் பாத்தா 2400 - ல தான் அரசியலுக்கு வருவாரு போல.

said...

ஆயில்ஸ்,

// என்னைப் பொருத்தவரை எல்லாமே ஆண்டவன்தான். அங்கிருந்து உத்தரவு வந்தால் நாளையே பல விஷயங்கள் நடக்கலாம் //

ம்ஹீம்.. எங்க தலைவரை இப்பத்திக்கு திருத்தமுடியாது போல! :)

// "கடமையை செய்! பலனை எதிர்பார்! //

கடமை ரஜினி படம் பாக்கறது. பலன் 3 மணி நேர கொண்டாட்டம். அம்புட்டுத்தேன் எனக்கான மெசேஜ் இதுல. கரெட்ட்டாத்தான் சொல்லியிருக்காரு :)

said...

//கடமை ரஜினி படம் பாக்கறது. பலன் 3 மணி நேர கொண்டாட்டம். அம்புட்டுத்தேன் எனக்கான மெசேஜ் இதுல. கரெட்ட்டாத்தான் சொல்லியிருக்காரு :)
//

தோடா!
:))

said...

//இவரு சொல்லுற கணக்கப் பாத்தா 2400 - ல தான் அரசியலுக்கு வருவாரு போல//

வருவாரா இல்லையாங்குற முடிவையே அப்பத்தான் சொல்வருன்னு எதிர்பார்க்குறோம்!

said...

இவ்வளவு நாளும் தொண்டனாக இருந்தோம்,. அதனால் நீங்கள் கட்சி தொடங்கவேண்டும் என்று கேட்பது பிழையான அணுகுமுறை. அதுமட்டுமல்லாமல் தமிழ் நாட்டில் கட்சி தொடங்க தேவையான அடிப்படை தகுதி நடிகனாக இருப்பது என்கிற ஒரு கட்டாயம் எதிர்காலத்தில் உருவாகவும் இது வழி செய்யும்

said...

//அதற்கேற்ற சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் அமையவேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கியம்.//

இது எல்லாமே இப்போது சரியாக அமைந்திருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் கை கோர்த்தால் வெற்றியும் நிச்சயம் என்றே தோன்றுகிறது.

said...

கலக்கல். எந்திரன ஓட வைக்க தேவையானத பண்ணிட்டாரு.!!
சூப்பர் ஸ்டாருன்னா சூப்பர் ஸ்டாரு தான். REPEET

said...

ரஜினி ரசிகர்களை விட மத்தவங்கதான் அவரோட அரசியல் நிலைப்பத்தியும், அவரோட ரசிகர்களைப்பத்தியும் கவலைப்படறீங்க. ஏனுங்க அப்படி?